இதெல்லாம் பன்னிட்டு நீ டாப்ல வர பாக்கற – பாலாவை வெளுத்து வாங்கும் ஜித்தன்.

0
1322
ramesh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 59 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறி இருந்தார். மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது. அதே மற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஆரி, சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், சிவானி, ரம்யா, நிஷா ஆகிய 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் கண்டிப்பாக அஜித், சிவானி, நிஷா, அனிதா ஆகிய 4 பேருக்கு கடும் போட்டிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கால் சென்டர் டாஸ்க் தற்போது மீண்டும் துவங்கி இருந்தது.

- Advertisement -

அதே போல நேற்றய நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜட் டாஸ்கின் அடிப்படையில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதன் அடிப்படையில் 1 -ல் இருந்து 13 வரை வரிசைபடுத்துமாறு கூறப்பட்டுஇருந்தது . இதிலும் போட்டியாளர்களுக்கு மத்தியில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அதிலும் பாலா, நான் கேட்ட கேள்விக்கு எல்லாம் ஏன் பதில் சொல்லணும், போன வச்சிட்டு போய் இருப்பேனே என்று கூறியிருந்தார்.

தற்போது வெளியாகியிருக்கும் முதல் பர்மாவில் இந்த டாஸ்கில் டாப் 6-ல் வருவதற்காக பாலா தன்னுடைய வாதத்தை எடுத்து வைக்கிறார். ஆனால், ஜித்தன் ரமேஷ் ‘நீ முன்னாடி நின்னு பேசி டாப் 6-ல் வர பார்க்கிறாயா ? உனக்கு என்ன மனஸ்தாபம் இருக்கிறதோ அதை எல்லாம் பேசிவிட்டு போனை வைத்து விட்டேன். ஆனால், அவர் தூங்காமல் புலம்பிக் கொண்டிருக்கிறார் என்று தன்னுடைய வாதத்தை முன் வைத்திருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.

-விளம்பரம்-
Advertisement