துவங்கியது இந்த வாரத்திற்கான நாமினேஷன். என்ன இவரை போய் இத்தன பேர் சொல்றாங்க.

0
1401
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது நேற்றைய நிகழ்ச்சியில் முதல் வார எழிமினேஷன் நடைபெற்று இருந்தது இதில் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டு இருந்த பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் முதல் வாரத்தில் வயதானவர்களும் அல்லது பெண்கள்தான் வெளியேறுவார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது அது இந்த சீசனுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ?

-விளம்பரம்-

கடந்த வாரம் பல்வேறு இணைய தளத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சனம் ஷெட்டி மற்றும் ரேகா விற்கு தான் மிகவும் குறைவான ஓட்டுகள் பதிவாகி இருந்தன ஆனால் ரேகாவை விட சனம் ஷெட்டி கொஞ்சம் வாக்குகளை பெற்று இருந்ததால் இந்த வாரம் தப்பித்துவிட்டார் அதேபோல நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் கமல் டாஸ்க் ஒன்றை கொடுத்தார் அதில் வீட்டில் யார் முகமூடி அணிந்து இருக்கிறார்கள் என்றும் யார் வெளிப்படையாக இருக்கிறார்கள் என்றும் தேர்ந்தெடுக்கும் டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார்.

- Advertisement -

இதில் ரியோ மற்றும் ஆரிக்கு 5 முகமூடிகள் கிடைத்திருந்தது. இதனால் இருவருமே கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர். அதிலும் நிறைய தனக்கு இந்த முகமூடிகளை கொடுத்தது நியாயமே இல்லை என்று கமலிடம் புலம்பித் தள்ளி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் புரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரத்திற்காண நமினேஷன் துவங்கி உள்ளது. அதில் பெருப்பாளன பெயர் ஆரி மற்றும் சுரேஷ் பெயரை நாமினேட் செய்துள்ளனர்.

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது. இதில் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரியோவும் கடந்த வாரம் டாஸ்க்கில் வெற்றி பெற்ற சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் ஆகிய இருவர்களையும் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் யார் யாரை நாமினேட் செய்ய இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-விளம்பரம்-

Advertisement