பிக் பாஸ் 4 தொகுப்பாளரை முடிவு செய்த எண்டிமால் நிறுவனம். போட்டியாளர்களுக்கு முதல் கண்டிஷன் இது தானாம்.

0
2761
biggboss
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக அணைத்து சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில் 20 நபர்களை வைத்து ஷூட்டிங்கைத் தொடங்கலாமென அரசு அறிவித்திருந்தது. அந்த எண்ணிக்கை போதாது எனத்  சீரியல் தயாரிப்பாளர்களான நடிகைகள் ராதிகா, குஷ்பு உள்ளிட்டோர் அரசுக்குக் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து தற்போது 60 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி கிடைத்தது. இதை தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-
Bigg-boss

ஆனால், அதுவும் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீரியல்களுக்கு 60 பேர் என்றால் படப்பிடிப்புகளை நடத்தி முடித்து விடலாம். ஆனால், 17 போட்டியாளர்கள் மட்டும் வைத்து எடுக்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை எளிதில் எடுத்து முடிக்க முடியாது என்று விளக்கமளித்தள்ளது விஜய் டிவி. வழக்கமாக ஜூன் மாதம் வந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி விடும். ஆனால், இதுவரை பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு கூட இன்னும் நடக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் 4 குறித்து விளக்கமளித்துள்ள விஜய் டிவி, கண்டிப்பாக பிக் பாஸ் 4 நிகழ்ச்சி நடக்கும். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அதன் வேலைகள் துவங்கப்படவில்லை. மிகவும் வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியை எப்படி நிறுத்த முடியும். ‘பிக் பாஸ் 4’ இன்னும் பிரம்மாண்டமாகத் திட்டமிட்டு இருக்கிறோம்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் 400 க்கும் மேற்பட்டோர் வேலை செய்யவேண்டும். தற்போது உள்ள சூழ் நிலையில் அது சாத்தியம் இல்லை. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் பணிகளைத் தொடங்கவுள்ளோம் என்று தெரிவித்திருந்தனர்.

biggboss

மேலும், நிகழ்ச்சி தொடர்புடைய சிலர் கூறும் போது அரசு கடைப்பிடிக்கச் சொல்கிற ஷூட்டிங் விதிமுறைகளைக் கடைப்பிடிச்சுத்தான் ஷூட்டிங் நடக்கும். போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகிறவர்களுக்கு முதல் கண்டிஷனே கோவிட் `டெஸ்ட்எடுக்க வேண்டும் என்பது தான் என்று தெரிவித்துள்ளதாக பிரபல பத்திரிகையில் செய்தியும் வெளியிட்டுள்ளனர்.

-விளம்பரம்-

இதுகுறித்து எண்டிமால் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது. ஜூன் மூன்றாவது வாரத்தில்துவங்கி வேண்டும். ஆனால், கொரோனாவால் அதுநடக்கவில்லை. ஜூலையில் ஒளிபரப்பு தொடங்கிடவிடலாம் என்று நினைத்தோம். தற்போது இருக்கிற சூழலுக்கு அதுவும் சாத்தியப்படாது என்று தோன்றுகிறது. இந்தக் `கோவிட்’ லாக் டௌன் ஆகஸ்ட்டுக்குள் முடிவுக்கு வந்துவிடும் நம்புவதால் செப்டம்பரில் ஒளிபரப்பைத் தொடங்கலாம் என்றுதிட்டமிட்டுள்ளோம். விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வரும். நிச்சயம் கமல் சார் தான் தொகுப்பாளராக இருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement