மூத்த பொண்ணு மாதிரி இல்ல பீத்த பொண்ணு மாதிரி இருக்க – மாயாவிடம் வாயை கொடுத்து மாட்டிய கூல் சுரேஷ்.

0
700
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷிடம் வம்பு இழுத்து மாயா சண்டை போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று்கிழமை அன்று படு கோலாகலமாக துவங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது 3 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது.முதல் சீசனை தொடர்ந்து இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி :

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். முதல் நாளே நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.

கூல் சுரேஷ்-மாயா சண்டை:

வழக்கம் போல் நிகழ்ச்சியில் முதல் நாளே சண்டை கலவரம் தொடங்கி விட்டது. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் மாயா- கூல் சுரேஷ் இடையே தான் பிரச்சனை முற்றியிருக்கிறது. அதாவது, மாயா தன்னுடைய துண்டை காணவில்லை என்று பவா செல்லதுரை இடம் கேட்டிருக்கிறார். அப்போது கூல் சுரேஷ் மாயாவை முறைத்தபடி கோவமாக பார்த்திருக்கிறார். உடனே மாயா, என்னாச்சு? ஏன் அப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டவுடன் எதுவும் பேசாமல் கூல் சுரேஷ் அமைதியாக இருக்கிறார். பின் மாயா அவரை விடாமல் எதற்கு அப்படி பார்க்கிறீர்கள்? என்ன பிரச்சனை சொல்லுங்கள்? என்று சொன்னவுடன் எதையும் பேசாமல் அமைதியாக கூல் சுரேஷ் இருக்கிறார்.

-விளம்பரம்-

கூல் சுரேஷ் செய்த வேலை:

இதனால் கோபம் அடைந்த மாயா நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. நீங்கள் கோபமாக பார்த்ததினால் தான் என்ன காரணம் என்று சொன்னேன். ஒருவேளை உள்ளே நீங்கள் காமெடியாக பேசுகிறேன் என்று மூத்த பொண்ணு பீத்த பொண்ணு என்று ஒரு மாதிரியாக பேசியிருந்தீர்கள். அதை நான் தவறு என்று சுட்டிக் காட்டினேன். காமெடி செய்வது வேற தவறாக பேசுவது வேறு. இதை எனக்கு சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அதனால் சொன்னேன். அதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். மாயா எவ்வளவு பேசியும் கூல் சுரேஷ் அதை கண்டுகொள்ளாமல் மற்றவர்களிடம் பேசியிருந்தார்.

விஷ்ணு -மாயா சண்டை:

உடனே கோபமடைந்த மாயா எதற்கு இப்படி மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள். கேட்டால் அதற்கு பதில் சொல்லுங்கள் என்றெல்லாம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். உடனே விஷ்ணு ,அவர் தான் எதுவும் இல்லை என்று சொல்கிறாரே அப்புறம் எதற்கு தேவையில்லாமல் பேசுகிறீர்கள் என்று சொன்னவுடன் மாயா நான் மரியாதை கொடுத்து தான் பேசுகிறேன். ஏன் அவர் என்னை கண்டுகொள்ளாமல் இருக்கணும். என் மீது கோபம் இல்லை என்றால் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்ல வேண்டியது தானே என்று விவாதம் செய்கிறார். இதனால் விஷ்ணுவிற்கும் மாயாவிற்கும் பிரச்சனை கிளம்பிவிட்டது.

Advertisement