பிக் பாஸ் பட்டத்தை வென்ற சாமானியன் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் – யார் இந்த பிரசாந்த்.

0
607
- Advertisement -

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் பட்டதை வென்றவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்தியில் தான் இந்த நிகழ்ச்சி முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழில் கடந்த அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

- Advertisement -

தமிழ் பிக் பாஸ் 7:

இதுவரை இல்லாத வகையில் இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீட்டுடன் நிகழ்ச்சியை பரபரப்பாக, சண்டை கலவரங்களுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அனன்யா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த சில வாரமாகவே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டிருக்கின்றது.

தெலுங்கு பிக் பாஸ்:

இன்னும் சில தினங்களில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி பைனலுக்கு வர இருக்கிறது. மேலும், தமிழை போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சென்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் போட்டியாளராக சகிலா கூட கலந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று தெலுங்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சி பைனல் நடந்து முடிந்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பல்லவி பிரசாந்த், அமர்தீப் ஆகிய 2 போட்டியாளர்களில் யார் கோப்பையை வெல்வார்கள்? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

-விளம்பரம்-

டைட்டில் வின்னர்:

பின் இருவரில் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று பல்லவி பிரசாந்த் வெற்றி பெற்றிருக்கிறார். இவர்தான் பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார். இவருக்கு 35 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பல்லவி பிரசாந்த் தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். இவர் youtube மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இவர் ஒரு விவசாயி. இவர் தன்னுடைய youtube சேனலில் தன்னுடைய அன்றாட வாழ்க்கை, விவசாய வேலைகளை பற்றி வீடியோக்களை பகிர்ந்து இருக்கிறார்.

பல்லவி பிரசாந்த் குறித்த தகவல்:

மேலும், அந்த வீடியோவில் எல்லாம் இவர், அண்ணா அண்ணா, நான் ஒரு விவசாயின் குழந்தை என்றெல்லாம் பேசும் வார்த்தைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவர்ந்திருக்கிறது. இவரை 555k மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். சோசியல் மீடியா மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து இவர் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக கவனம் பெற்று போராடி இந்த டைட்டிலை வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு விவசாயின் குழந்தைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதை அடுத்து பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement