ஏஞ்சல் vs டெவீல் டாஸ்க்: ஜாக்குலின், சவுந்தர்யாவுக்கு பிக் பாஸ் கொடுத்த தண்டனை? காரணம் இது தான்

0
192
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் டெவீல்- ஏஞ்சல் டாஸ்க்கில் வெற்றி பெற்ற நபர்கள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி ஒன்பதாம் வாரம் தொடங்கி 61 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று சிவகுமார் தான் வெளியேறி இருந்தார்.
மேலும், ஒன்பதாம் வாரத்தில் ஏஞ்சல்-டெவீல் சுற்று நடைபெற்றிருக்கிறது. எப்போதுமே இந்த டாஸ்க் வந்தாலே பிக் பாஸ் வீடே கலவர பூமியாக மாறி விடும். அந்த வகையில் இந்த வாரம் ஏஞ்சல்- டெவீல் டாஸ்க்கில் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை கலவரம் வெடித்து கொண்டிருக்கின்றது. டெவீல் அணியில் இருப்பவர்கள் ஏஞ்சல் அணியில் இருப்பவர்களை கெட்டவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் டாஸ்க்.

ஏஞ்சல்- டெவீல் டாஸ்க்:

அதாவது, ஏஞ்சல்ஸ் அணியில் இருக்கும் போட்டியாளர்களை வெறுப்பேற்றி அவர்கள் கோபமானாலோ, அழுதாலோ அவர்களிடம் இருக்கும் ஹார்ட்டை கழட்டிக் கொள்ள வேண்டும். இதுதான் டாஸ்க்கின் விதி. அதோடு இந்த டாஸ்கில் அதிகமான ஹார்ட் யார் வாங்குகிறார்களோ அவர் தான் நாமினேசன் ப்ரீ பாஸ் டாஸ்க்கில் வென்றவர்கள் என்று கூறப்பட்டது. இதனால் சிலர் கொஞ்சம் எல்லையை மீறி முட்டையை வாயில் ஊத்துவது, தலையில் உடைப்பது, முகத்தில் திணிப்பது, குப்பையை கொட்டுவது என்று மட்டமான வேலை எல்லாம் செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் கொடுத்த தண்டனை:

அதுமட்டுமில்லாமல் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கு மத்தியில் கடும் கலவரம், சண்டை, போட்டி எல்லாமே நடந்தது. குறிப்பாக சௌந்தர்யா, ஜாக்லின் இதுவருமே மற்ற போட்டியாளர்களிடம் நிறைய வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த டாஸ்க்கில் சுவாரஸ்யம் இல்லாத இரண்டு பேரை பிக் பாஸ் தேர்ந்தெடுக்க சொல்லி இருக்கிறார். அதில் ஜாக்லின்- சௌந்தர்யாவை தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்களுக்கு தண்டனையாக உப்பில்லாத சாப்பாட்டை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். அதை தான் அவர்கள் சாப்பிட வேண்டும்.

டாஸ்கில் வென்றவர்கள்:

மேலும், இந்த ஏஞ்சல்-டெவீல் டாஸ்கில் விளையாடிய சிறந்த இரண்டு பேரை பிக் பாஸ் தேர்ந்து எடுக்க சொல்கிறது. அந்த வகையில் ஏஞ்சல் அணியிலிருந்து ரஞ்சித், பவித்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். டெவீல் அணியில் இருந்து சிறந்தவர்களாக தீபக், மஞ்சரி தேர்வாகி இருக்கிறார்கள். இவர்கள் நான்கு பேருக்கும் மத்தியில் தான் அடுத்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற இருக்கிறது.

Advertisement