பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பவித்ரா ஜனனி சென்று இருக்கும் இடம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் பவித்ரா ஜனனி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றியடைந்த சரவணன் மீனாட்சி 2 என்ற சீரியலின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதை அடுத்து இவர் ராஜா ராணி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதற்கு பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோயினியாக நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இந்த சீரியலின் வெற்றியால் இவர் தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடரில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதை அடுத்து தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக சமீபத்தில் தான் முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த பணப்பெட்டி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார். இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால், ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார். இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பவித்ரா:
இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, இடத்தை இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் பவித்ரா சிறப்பாக விளையாடியிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ஆர்மி உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஜனனி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருந்தார்.
பவித்ரா சென்ற இடம்:
இப்படி இருக்கும் நிலையில் சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு ஜனவரி சென்றிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சன் டிவியில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் ரஞ்சனி. இந்த தொடரின் படப்பிடிப்பு தளத்திற்கு தான் பவித்ரா சென்றிருக்கிறார். காரணம், அவருடைய தோழி சமந்தா இந்த சீரியலில் நடித்து வருகிறார். இருவரும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் பவித்ரா சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.