அது எனக்கு குழந்தையில் வந்த பழக்கம், அருண் துரோகம் பண்ணினாரா? – சிவக்குமார் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

0
264
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி ஒன்பதாம் வாரம் முடிந்து 65 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆனந்தி, சாச்சனா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அளித்த பேட்டியில் சிவகுமார், பிக் பாஸ் மற்றும் அவரை குரலையும் மிஸ் பண்ணுகிறேன். வெளியில் வந்ததுமே கொஞ்சம் எமோஷனலாக டவுன் ஆக இருந்தேன். சில விமர்சனங்கள் என் மீது வைத்தார்கள். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை. என்னுடைய மனைவி எனக்கு ஆறுதல் சொன்னார். எந்த ஒரு ஐடியாவும் இல்லாமல் தான் நான் நிகழ்ச்சிக்குள் போனேன். நான் பல வருடமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து இருக்கிறேன். சொல்லப்போனால், எனக்கு இது ஏழு வருட கனவு. ஒவ்வொரு வருடமும் உள்ளே போகணும் என்று ஆசைப்பட்டேன்.

- Advertisement -

சிவக்குமார் பேட்டி:

நான் ரசிகனாக அந்த நிகழ்ச்சியை பார்த்தது வேறு, போட்டியாளராக பங்கு எடுத்து விளையாடுது வேறு. இரண்டு விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நான் ரொம்ப பொறுமையானவன். வீட்டில் இருக்கிற ஒவ்வொரு நபரையும் புரிந்து கொள்ள நேரம் எடுத்தது. பொறுமையாக நான் விளையாட தொடங்குவதற்குள்ளே நான் வெளியே வந்து விட்டேன். நான் பிக் பாஸ் வீட்டுக்குள் எல்லோரிடமும் நேர்மையாக தான் இருந்தேன். தெரியாத விஷயங்களையும் கற்றுக் கொண்டேன். அதேபோல் நான் ரொம்ப அமைதியாக இருப்பேன். அனைத்து விஷயங்களையும் நேர்மறையாக எடுத்துக் கொண்டேன் என்று வெளியில் வந்ததும் கமெண்ட்ஸ் பார்த்தேன்,

குழந்தை பருவம்:

அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த குணம் எனக்கு என்னுடைய குழந்தை பருவத்தில் கிடைத்தது. இவருக்கு என்னப்பா, பெரிய குடும்பத்திலிருந்து வந்திருக்கார் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் கிடையாது. எங்க அம்மா சிங்கிள் மதர். என்னுடைய குழந்தை பருவம் போல் வேறு எந்த குழந்தைக்குமே அமையக்கூடாது. எங்க அம்மா அப்பவே எனக்கு நிறைய நேர்மையான எண்ணங்களை ஊட்டி வளர்த்தார். அதுதான் இப்ப எங்க போனாலும் வெளிப்படுகிறது.

-விளம்பரம்-

கோவா கேங் பற்றி சொன்னது:

கோவா கேங்கில் நானும் ஒரு உறுப்பினர் தான். பொம்மலாட்டம் டாஸ்க் நடக்கும் போது தான் அந்த கேங் உருவானது. அப்போ என்னிடமும் சேருவதற்காக கேட்டார்கள். நானும் அந்த கேங்கில் சேர்ந்து கொண்டேன். அதற்குப் பிறகு அவர்கள் எல்லாம் ஒரு கேங்காக உருவாகி என்னை கழட்டி விட்டார்கள். டால் டாஸ்க்கில் அருண் என்னை முதுகில் குத்தினார் என்று பல கமெண்ட்ஸ்கள் வந்ததை பார்த்தேன். என்னுடைய மனைவியும் அதே மாதிரி தான் இருக்குன்னு சொன்னார். அந்த டாஸ்க் நானும் அருணும் டீம் போட்டோம் விளையாடினோம்.

அருண் குறித்து சொன்னது:

அந்த டாஸ்க்கில் எனக்கு உடன்பாடு இல்லை. எல்லோரும் விளையாட்டு மாதிரி இல்லாமல் அடித்து பிடித்து விளையாடி இருந்தார்கள். என்னுடைய பொம்மையை வைக்காதீங்க. என் மேல பாசம் இருந்தால் தயவு செய்து அந்த பொம்மையை உள்ளே வைத்து விடாதீர்கள் என்று அருண் சொல்லிவிட்டார். நானும் அவர் சொன்ன மாதிரி செய்தேன். ஆனால், எனக்குள் ஒரு உறுத்தல் இருந்தது. கடைசி கட்டத்தில் எனக்காக இன்னொரு நபர் தான் விளையாடி இருந்தார். அந்த டாஸ்க் அருண் விளையாடி முடித்ததும் என்னை கட்டிப்பிடித்து அழுதார். அவர் என்னை முதுகில் குத்தினார் என்று நான் யோசிக்கவில்லை. அவர் விளையாட்டை அவர் நேர்மையாக விளையாடினார். என் விளையாட்டை நான் நேர்மையாக விளையாடினேன். மற்றபடி எந்த ஒரு நம்பிக்கை துரோகம் எதுவும் கிடையாது என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement