பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் நான்கு வாரம் இருந்த சிவகுமாருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

0
193
- Advertisement -

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் சிவகுமார் வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி ஒன்பதாம் வாரம் தொடங்கி 58 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

மேலும், இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா,சுனிதா, ரியா தியாகராஜன், வர்ஷினி ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். அதன் பின் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பொம்மை டாஸ்க் நடைபெற்றிருந்தது. இதனால் பிக் பாஸ் வீடே கலவர பூமியாக இருந்தது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த பொம்மையை தேர்வு செய்து அதை டால் ஹவுசில் வைக்க வேண்டும்.
அதோடு அவர்கள் தங்களுடைய பொம்மைகளை தேர்வு செய்யவே கூடாது.

பொம்மை டாஸ்க்:

அது மட்டும் இல்லாமல் தங்களுக்கு விருப்பமில்லாத பொம்மையை டால் ஹவுசில் சேர்க்க விடாமலும் தடுக்கலாம். இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களுமே வெறி கொண்டு விளையாடி இருந்தார்கள். இந்த டால் டாஸ்க்கில் ஜெஃப்ரி தான் வின்னர் ஆனார். இந்த வாரத்தினுடைய பெஸ்ட் பிளேயர் ஆக ஜெஃப்ரி, சாச்சனா தேர்வாகி இருந்தார்கள். பின் இந்த வாரம் ஒர்ஸ்ட் பிளேயர் ஆக ராணவ்- மந்திரி தேர்வாகி இருந்தார்கள். பின் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று சிவகுமார் தான் வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-

சுஜா வருணி பதிவு:

அதோடு சிவகுமார் வெளியேறியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். மேலும், இது தொடர்பாக சிவகுமாரின் மனைவியும், நடிகையுமான சுஜாவருணி பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், சிவக்குமார் ஆறாவது இடத்தில் தான் இருந்தார். ஆனால், கடைசி இடத்திலிருந்த சாச்சனா காப்பாற்றப்பட்டு இருந்தார். இது விஜய் சேதுபதியால் தான். மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக சாச்சனா நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய மகளாகவே பார்த்து வருகிறார் என்பது போல அவர் குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.

சிவகுமார் சம்பளம்:

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் சிவகுமார் வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் மொத்தம் பிக் பாஸ் வீட்டில் 28 நாட்கள் இருந்திருக்கிறார். இவருக்கு ஒரு நாளைக்கு 15,000 சம்பளமாக பேசப்பட்டது. அதன்படி 28 நாட்களுக்கு மொத்தம் இவருக்கு 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement