பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இரண்டாவது எலிமினேஷன் குறித்த தகவல்தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று 13ஆம் நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒருபுறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் வந்து இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார்.
பிக் பாஸ் சீசன் 8:
மேலும், இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனில் அதில் அதிக வாக்குகளை பெற்று சௌந்தர்யா, ஜெஃப்ரி, ரஞ்சித், அர்னவ், விஷால், முத்து, தர்ஷா, சாச்சனா, ஜாக்லின், தீபக் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். பின் இரண்டாம் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் சத்யா வெற்றி பெற்றார். அதற்குப்பின் ஆண்கள் அணியில் இருந்து தீபக்கும், பெண்கள் அணியில் இருந்து தர்ஷாவும் இடம் மாறினார்கள். நேற்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருந்தார். அதில் யார் அறிவில், திறமையில், டீம் ஒற்றுமையில் சிறந்தவர் என்பதை காண்பிக்க வேண்டும்.

நேற்றைய எபிசொட்:
எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவர்கள் நாமினேஷனில் இருந்து ஒருவரை காப்பாற்றலாம் என்று அறிவித்தார். இதை அடுத்து குவிஸ் டாஸ்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றார்கள். அதற்கு பிறகு டம்ளரை அடுக்க பந்தால் தடுக்க வேண்டும் டாஸ்கில் ஆண்கள் அணி வெற்றி பெற்றார்கள். கடைசி ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே டாஸ்க்கில் 15 பொருளைகளை அதே ஆர்டரில் அடுக்க வேண்டும். அதில் ஆண்கள் அணியில் 24 புள்ளிகள் பெற்றார்கள். பெண்கள் அணியில் 25 புள்ளிகள் பெற்று இந்த டாஸ்க்கை வென்றார்கள்.
ஜாக்லின் காப்பாற்றப்பட்டார்:
பின் பெண்கள் அணியில் ஒரு நபரை நாமினேஷனில் இருந்து காப்பாற்றலாம் என்று பிக் பாஸ் அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் பெண்கள் அணியில் ஜாக்குலின், சாச்சனா, சௌந்தர்யா தர்சா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். அதில் ஜாக்லின் காப்பாற்றப்பட்டார். பின் பிபி அவார்டு நிகழ்வினால் ஒவ்வொரு ஆண்கள அணியினர் பெண்களுக்கும், பெண்கள் அணியில் இருந்து ஆண்களுக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டது. இந்த விருது விழாவில் அர்னவ் கொடுத்த சொம்பு தூக்கி விருதால் அன்ஷிதா ரொம்பவே மனமுடைந்து கதறி அழுதார்.

இந்த வார எலிமினேஷன்:
இந்நிலையில் இந்த இரண்டாவது வாரத்தில் எலிமினேஷன் ஆனது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த வார நாமினேஷனில் இருந்து, நேற்று ஜாக்லின் தப்பித்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸில் குறைந்த ஓட்டுகளை பெற்று அர்னவ் மற்றும் தர்ஷா கடைசியில் இருந்தார்கள். தற்போது, அர்னவ் இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், பிக் பாஸ் 8-ல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக இந்த வாரம் நடிகர் TSK உள்ளே போக உள்ளாராம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.