ஆரியிடம் எடுபடாத அர்ச்சனாவின் அம்மா செண்டிமெண்ட். ஒரே இரவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்த ஆரி.

0
1886
- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரம் சுவாரசியம் குறைவாக இருந்த இரண்டு போட்டியாளர்களை பிக் பாஸ் தேர்வு செய்ய சொன்னார். இதில் சொல்லி வைத்தது போல அர்ச்சனா குரூப் அனிதா மற்றும் 6in பெயரைத்தான் சொன்னார்கள் இதனால் கடுப்பான தன்னுடைய கருத்தை முன்வைத்தார் இந்த வீட்டில் குருபீசம் இருக்கிறது என்றும் அவரவருக்கு பிடித்த போட்டியாளரை காப்பாற்ற வேறு ஏதாவது ஒரு போட்டியாளர் பலி கொடுக்கப்படுகிறது என்றும் ஓபனாக பேசினார் ஆரி. அதேபோல இந்த வீட்டில் யார் யார் எங்கெங்கே என்னென்ன பேசுகிறார்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை தன்னால் நெத்தி பொட்டில் அடித்தது போலக் கூறமுடியும் என்றும் கூறியிருந்தார். இதனால் இவருக்கும் அர்ச்சனா குரூப்பிற்க்கும் கொஞ்சம் பிரச்சினை ஏற்பட்டது.

-விளம்பரம்-

அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைவருக்கும் இரண்டு சப்பாத்தி என்று சொல்லிவிட்டு ரியோவிற்கு மட்டும் மூன்று சப்பாத்தி அர்ச்சனா கொடுத்தார் என்றும் ஆனால் தான் 3 சப்பாத்தியை எடுக்கும் போது அனைவருக்கும் இரண்டு சப்பாத்தி தான் என்றும் அர்ச்சனா சொன்னதாக கூறினார் ஆரி. அதேபோல அனைவருக்கும் பொங்கலை பரிமாறிக் கொண்டிருக்கும்போது ஆஜீத்திற்கு பொங்கல் வைக்கும் போது போதுமா இன்னும் கொஞ்சம் வைக்கட்டா என்றுதான் கேட்டிருந்தார், அருகிலிருந்த சோம் கூட கூட நல்லா சாப்பிடுடா என்று சொன்னார். ஆனால் இதனை அர்ச்சனா மற்ற போட்டிகளில் இடம் ஆரி சாப்பாட்டிற்கு கணக்கு பார்க்கிறார் என்பது போல கூறிவிட்டார்.

- Advertisement -

இந்த பஞ்சாயத்திலும் நேற்று ஆரி எடுத்து வந்தார் இது குறித்து சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அர்ச்சனா பேசிக்கொண்டிருக்கும் போது என்னை யார் சாப்பாட்டில் குறை சொன்னாலும் எனக்கு பிடிக்காது. அந்த மனுஷனை இன்னிக்குவச்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு வேகமாக சிறையில் இருந்த ஆரியிடம் பேசச் சென்றார். ஆனால் மாரி தன்னுடைய கருத்தில் மிகவும் தெளிவாக இருந்தார். இதனால் அர்ச்சனாவால் ஆரிக்கு பதிலடி கொடுக்க முடியவில்லை. அதேபோல பாலாஜியும் ஆரி சுட்டி காண்பித்தார். ஒரு மனுஷன் லைட் அணைக்கும் முன்பே தூங்குவார் வேலை செய்ய முடியாது என்று சொல்லுவார், காலையில் எழுந்து வந்த நடனம் ஆட மாட்டார். இதையெல்லாம் நீங்கள் ஏன் விவாதிக்க மாட்டீர்களா என்று நச்சென்று கேள்வி கேட்டார் அதற்கு யாரிடமும் பதில் இல்லை.

அதற்கு பாலாஜி நீங்கள்தான் இந்த வாரத்தின் மிகவும் போராட போட்டியாளர் என்று உங்களை தேர்ந்தெடுத்தார்கள், நீங்கள் யாரிடமும் ஒரு பந்தத்தை உருவாக்கவில்லை என்று கூறினார். அதற்கு ஆரி, நீ மற்றவர்களுக்கு பிடித்தமான போட்டியாளர் என்பதால் உன்னை காப்பாற்றி விட்டார்கள் என்று நெத்தி பொட்டில் அடிப்பது போல சொன்னார். இதற்கும் பாலாஜியிடம் பதிலில்லை. நேற்று அத்தனை பேரும் ஆரியை டார்கெட் செய்தாலும் தனி ஒருவனாக நின்று தன்னுடைய தெளிவான கருத்துக்களை முன்வைத்தார். இதனால் ஆரியின் பேச்சுக்கு ரசிகர்களின் ஆதரவு குவிந்து வருகிறது. அதே போல ட்விட்டரில் ஆரி என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

ஏற்கனவே அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் வீட்டை கூட்டும் வேலையில் கொஞ்சம் பிரச்சனை வெடித்தது. அப்போது பாலாஜி, அர்ச்சனாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், நீங்கள் கேப்டனாக இருந்தாலும் உங்கள் பேச்சை என்னால் கேட்க முடியாது என்று அர்ச்சனாவிடம் நேருக்கு நேராக மூஞ்சில் அடித்தது போல சொன்னார் பாலாஜி. ஆனால், அடுத்த நாளே அர்ச்சனா, பாலாஜியை தனது மகன் என்று கூறி சென்டிமென்டாக பேசி பாலாஜியை தன் வசப்படுத்திவிட்டார். அதன் பின்னர் அர்ச்சனா மற்றும் பாலாஜி இருவருமே தாயா பிள்ளையா பழகி வருகிறார்கள். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் அம்மா பாசம் ஆரியிடம் இடம் எடுபடவில்லை.

Advertisement