பிக் பாஸில் கலந்துகொண்ட திருநங்கை குறித்து சீசன் 4 வெற்றியாளர் போட்ட பதிவை பாருங்க.

0
3759
namitha
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, சின்னத்தம்பி பவானி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

-விளம்பரம்-

மீதமுள்ள பல போட்டியாளர்கள் யார் என்பதே தெரியவில்லை. அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர். ராஜு ஜெயமோகன் அபிஷேக், அபிநய், வருண், இமான் அண்ணாச்சி அண்ணாச்சி, சிபி, நிரூப் என்று 7 ஆண் போட்டியாளர்களும் இசைவாணி, மதுமிதா ,பிரியங்கா, பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சங், ஸ்ருதி, அக்ஷரா ரெட்டி, ஐகி பெர்ரி, தாமரைச்செல்வி என்று 10 பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

- Advertisement -

மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையாக நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர், இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் 2011 ஆம் ஆண்டு தான் திருநங்கையாக மாறினார்.அதை தொடர்ந்து மிஸ் சென்னை, மிஸ் பாண்டிச்சேரி, மிஸ் இந்தியா போன்ற பல்வேரு அழகி போட்டிகளில் பட்டம் வென்றவர். மேலும், ஸ்பெயினில் நடந்த மிஸ் ட்ரான்ஸ் அழகி போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு பெருமை சேர்த்தார்.

2018-ல் மிஸ் இந்தியா பட்டம் வென்றார். அதன் பின்னர் தான் இவருக்கு சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. பிக் பாஸில் ஒரு திருநங்கைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருப்பதை பாராட்டியுள்ள சீசன் 4 வெற்றியாளர் ஆரி, பாலினம் – ஆண், பெண்ணுக்கு மட்டுமானது அல்ல மூன்றாம் பாலினத்தவருக்கும் உரியது என்பதை உணர்ந்து – மேடை ஏற்றி வாய்ப்பை உருவாக்கிய விஜய் டிவி பிக் பாஸ் 5 தேர்வு குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement