அப்போதே நினைத்தேன்.! தர்ஷன் வெளியேற்றம் குறித்து ட்வீட் போட்ட சீசன் ஒன் போட்டியாளர்.!

0
2999
tharshan
- Advertisement -

பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று தர்ஷன் வெளியேறி இருந்தது தான். பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர் இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிக்பாஸ் அறிவித்த 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-

கவின் வெளியேறியதால் லாஸ்லியா சாண்டி தர்ஷன் ஷெரின் ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்று இருந்தனர். இந்த வாரம் முழுவதும் மிகவும் பரபரப்பாக ஒட்டிங்கும் நடைபெற்று வந்தது. இதில் கண்டிப்பாக ஷெரின் தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் தர்ஷன் வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதும் விஜய் டிவி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர் ரசிகர்கள்.

இதையும் பாருங்க : படு குண்டாக இருந்த வித்யூ ராமன்.! உடற் பயிற்சி மூலம் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.!

- Advertisement -

தர்ஷன் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று சக போட்டியாளர்கள் புகழாரம் சூட்டி வந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்பாக தர்ஷன் எலிமினேட் ஆகியுள்ளது சக போட்டியாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வகையில் நடையும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான ஆர்த்தியும் தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆர்த்தி, ரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன்…..மக்களால் போற்றப்படுபவர்கள் பிக் பாஸில் எலிமினேட் செய்யப்படுவார். நிச்சயம் நீங்கள் தான் வின்னர் தர்ஷன். நீங்கள் தான் தேசத்திற்கும் இலங்கைக்கும் கிடைத்த பெருமை என் சகோதரா என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement