நட்பின் போர்வையில் எல்லை மீறுகிறாரா ? குறும்படம் போட்டு கேள்வி கேட்கும் நெட்டிசன்கள். பவானி சொன்னது உண்மையோ ?

0
772
Pavni
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு காதல் கதை உருவாகிவிடும். ஆனால், இந்த சீசனில் இருக்கும் பலர் திருமணமானவர்கள் என்பதால் அப்படி எதுவும் பெரிதாக இதுவரை வரவில்லை. இருப்பினும் வருண் – அக்ஷரா ஆகிய இருவர் பற்றி முடிச்சுப் போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வருகின்றனர். இவர்கள் இருவரையும் தாண்டி பிக் பாஸ் வீட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு வருவது அபிநய் மற்றும் பவானி உறவுதான் .

-விளம்பரம்-

அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது ராஜு, அபிநய்யிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பாவனி விவகாரம் தான் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் பேசு பொருளாக இருந்து வருகிறது . இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாவனி, அபிநய்யை பற்றி பேசியதை குறும்படம் போட்டு காண்பித்து பாவனியின் முகத்திரையை கிழித்தார் கமல்.

- Advertisement -

இவர்கள் இருவருக்கும் இருக்கும் உறவு குறித்து கிசுகிசுகிளம்புவதற்கு முதல் காரணமே இவர்கள் இருவரும் தான். இருப்பினும் அபிநய் தான் தன்னிடம் பின்னாலே வந்து பேசுகிறார். அவருக்கு என் மீது ஒரு பீலிங்ஸ் இருப்பது உண்மை தான் ஆனாலும், அவரிடம் என்னிடம் பேச வேண்டாம் என்று என்னால் நேரடியாக சொல்ல முடியவில்லை என்று கூறி இருந்தார் பாவனி.

அதே போல பாவனியிடம் அபிநய் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்துள்ளார் என்றும் பாவனியிடம் லெட்டர் ஒன்றில் ‘உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும், நீ எதை எப்படி எடுத்துக்கொள்வாய் என்று புரியவில்லை’ என்று எழுதி கொடுத்ததாகவும் பாவணியே கூறி இருந்தார். பாவனி பேசியதில் இருந்து பார்க்கும் போது அபினய் தான் அவரிடம் வம்படியாக சென்று பேசுவது போல பாவனியின் பேச்சில் தெரிகிறது.

-விளம்பரம்-

அதே போல பாவனி இவ்வளவு சொல்லியும் அபிநய், இதற்க்கு ஒரு தெளிவான விளக்கத்தை கொடுக்கவில்லை என்பதே சக போட்டியாளர்களின் கருத்து. இப்படி ஒரு நிலையில் பாவனியிடம் அபிநய் அதிக உரிமையை எடுத்துக்கொள்கிறார். ஆனால், அது பாவனிக்கு பிடிக்கவில்லை என்று அபிநய், பாவனியிடம் நடந்து கொண்ட சில விதங்களில் வீடியோகளை நெட்டிசன்கள் பகிர்ந்து, ஒரு நண்பர் இப்படி தான் செய்வாரா ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement