நாணயத்தை போல இரண்டு பக்கம் இருக்கு, என்ன தப்பா புரிஞ்சிக்காதீங்க – அபிநய் போட்ட முதல் பதிவு.

0
466
abhinay
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 81 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அனைவரையுமே நாமினேட் செய்து இருந்தார் பிக்பாஸ். கடந்த அனைவரும் நாமினேட் ஆகி இருந்ததால் நமினேஷனில் இருந்து தப்பிக்க கடந்த வாரம் முழுவதும் பல விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வந்தது . இதில் முதல் இரண்டு டாஸ்கில் முதல் டாஸ்கில் சிபி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் டாஸ்கில் நிரூப் வெற்றிபெற்றார்.

- Advertisement -

நாமிநேஷனில் இருந்து தப்பித்த போட்டியாளர்கள் :

இதன் மூலம் இவர்கள் இருவரும் இந்த வார நமினேஷனில் இருந்து தப்பித்து இருந்தனர். அதன் பின்னர் பல விதமான டாஸ்குகள் நடைபெற்றது. அதில்,ஒரு டாஸ்கில் தாமரை மற்றும் அபிநய் கடைசி வரை விளையாடினர் அதில் தாமரை வெற்றி பெற்று அவரும் நாமிநேஷனில் இருந்து தப்பித்தார். பின்னர் இறுதியாக சஞ்சீவ், ராஜு, பிரியங்கா, அக்ஷரா, வருன், அபிநய், அமீர் ஆகிய 7 பேர் மட்டும் இருந்தனர்.

Bigg Boss Abhinay Concerns On Pavni - time.news - Time News

டேமேஜ் ஆன அபிநய் பெயர் :

இறுதி டாஸ்கில் சஞ்சீவ் , அமீர் காப்பாற்றப்பட்ட நிலையில் ராஜு, பிரியங்கா, அக்ஷரா, வருன், அபிநய் ஆகிய 5 பேர் மட்டும் நாமினேஷனின் இருந்தனர். இதில் குறைவான வாக்குகள் பெற்ற அபிநய் வெளியேற்றப்பட்டார். அபிநய், உள்ளே இருந்த வரை பாவனியிடம் தான் அதிக நெருக்கம் காட்டி வந்தார். மேலும், அவரிடம் இவர் லெட்டர் எழுதி கொடுத்ததாக பவானி கூறியதில் இருந்தே இவரது பெயர் டேமேஜ் ஆனது.

-விளம்பரம்-

அபிநய் போட்ட முதல் பதிவு :

அபிநய் வெளியேற முக்கிய காரணமே இவரது பெயர் பாவனி விஷயத்தில் டேமேஜ் ஆனது தான். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் பதிவை போட்டுள்ளார் அபிநய் ‘ அதில் மீண்டும் ரியல் உலகத்திற்கு வந்து இருப்பதில் மகிழ்ச்சி. இந்த பிக்பாஸ் பயணத்தில் எனக்கு நீங்கள் அளித்த அன்பையும் ஆதரவையும் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன். இந்த 78 நாளில் நான் நிறைய விஷயங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதுவும் கமல் சார் போன்ற ஒரு மிகப் பெரிய மனிதர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் நான் இருந்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்க்கையில் எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கும் அதை எந்த பக்கத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை பயணமும் அமையும்.

எனக்கு அதிர்ஷ்டம் இல்லை :

நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்தது போல எனக்கு அதிர்ஷ்டம் அமையவில்லை ஆனால், எனக்கு ஒரு அன்பான குடும்பம் கிடைத்திருக்கிறது. எப்போதும் என்னுடைய இன்ப துன்பங்களில் அவர்கள் எனக்காக நின்று இருக்கிறார்கள். ஒரு சில சமயங்களில் என்னை தவறாக புரிந்து கொண்டு இருக்கலாம். ஆனால், அனைத்திற்கும் மேலாக இது வெறும் ஒரு நிகழ்ச்சிதான் அதை நாம் அப்படி தான் பார்க்கவேண்டும். வாழ்க்கை உங்களுக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்து உங்களை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கும் இதை அனைத்தையும் நான் நல்ல விதமாகவே பார்த்து என்னுடைய வருங்காலத்தை நான் சிறப்பாக அமைத்துக் கொண்டு என்னுடைய குடும்பத்தாருக்கும் என்னை விரும்புவர்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பேன்.

என் குடும்பம் என்னை நம்பியது :

என்னுடைய பிக்பாஸ் பயணத்திற்கு என்னுடைய குடும்பத்திற்கு தான் நன்றி சொல்லவேண்டும். அவர்கள்தான் என்னை மிகவும் நம்பினார்கள். உங்களின் அன்பிற்கும் வாக்குகளுக்கும் மிக்க நன்றி, என்றும் உங்களை மறக்க மாட்டேன். இந்த தருணங்களை நான் வாழ்நாள் முழுவதும் நினைத்து பெருமை கொள்வேன் இது வெறும் ஆரம்பம் தான் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான விஷயங்கள் அமைய உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement