Bigg Boss Tamil : பாவனி விவகாரம், பிக் பாஸுக்கு பின் தன் கணவர் பெயரை நீக்கிய மனைவி – விவாகரத்து குறித்து அபிநய் கொடுத்த விளக்கம்.

0
509
abhinay
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர்களை விட தெரியாத நபர்கள் தான் அதிகம் கலந்திருந்தார்கள். அந்த வகையில் தெரியாத நபராக நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் அபிநய். இவர் வேற யாரும் இல்லைங்க காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பேரன் ஆவார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-239-1024x607.jpg

மேலும், அபிநய் அவர்கள் ராமானுஜம், சென்னை 6000028-2 போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த ஆரம்பத்திலிருந்தே இவர் நன்றாக விளையாடி வந்தார். பின்னர் அபிநய்-பாவனி இவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இவருடைய பெயர் டேமேஜ் ஆனது என்றே சொல்லலாம், அதிலும் இவர் பாவனிக்கு லெட்டர் எழுதி கொடுத்த இருந்த விஷயம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது.

- Advertisement -

அபிநய் – பாவனி சர்ச்சை:

இதற்கு கமலஹாசன் முதல் போட்டியாளர்கள் வரை என பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி இருந்தார்கள். பிறகு அபிநய் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 70 நாட்களுக்கு மேல் விளையாடி வெளியேறிவிட்டார். மேலும், நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த அபிநய் இடம் பாவனியின் குற்றச்சாற்றிக்கு உங்கள் மனைவி என்ன சொன்னார் என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அபிநய், எல்லா மனைவிமார்களை போல தான் அவரும் ரியாக்ட் செய்தார். மனைவிமார்களை நமக்குள் நடக்கும் விஷயத்தை எப்படி நீங்கள் கையாளுகிறீர்கள் என்பது தான் முக்கியம்.

This image has an empty alt attribute; its file name is 1-212-1024x734.jpg

அபிநய் பெயரை நீக்கிய அவரின் மனைவி :

இறுதியில் குடும்பம் தான் அனைத்தும்’ என்று பதிவிட்டு இருந்தார். அது மட்டுமில்லாமல் நிகழ்ச்சிக்கு பிறகு அபிநய் மற்றும் அவருடைய மனைவி அபர்ணா இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து இருப்பதாக சோஷியல் மீடியாவில் பல்வேறு வதந்திகள் எல்லாம் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் அபிநய்யின் மனைவி அபர்ணா, தன்னுடைய பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாற்றி இருக்கிறார். இதற்கு முன் வரை அபர்ணா அபிநய் என்று பெயர் வைத்து இருந்த இவர் தற்போது அபிநய் பெயரை நீக்கிவிட்டு அபர்ணா வரதராஜன் என்று மாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இவர் இப்படி மாற்றி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் அல்டி மேட் நிகழ்ச்சிக்கு சென்ற அபிநய் மூன்றாவது வாரம் வெளியேற்றப்பட்டார்.மீண்டும் அபிநய் வந்த பிறகு எல்லோரும், நீங்களும் உங்கள் மனைவியும் பிரிந்து விட்டீர்களா? என்னாச்சு? ஏதாச்சு? என்று பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருந்தார்கள். இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அபிநய் தன் மனைவி மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு எல்லோரும் என்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்து கேட்டு இருந்தீர்கள் அவர்களுக்கான பதில் தான் இது என்று பதிவிட்டிருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-213-1024x911.jpg

விவாகரத்து குறித்து விளக்கம் :

அதே போல ரசிகர் ஒருவர், உங்களுக்கு விவகாரத்து ஆகிடுச்சா என்று கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த அபிநய், இந்த செய்தியை கேட்டு நான் முதலில் ஷாக் ஆனேன். இது தவறான நபர்களால் பரப்பப்படுகிறது. இது உண்மை இல்லை ‘ என்று தெரிவித்துள்ளார். இதன்முலம் அபிநய் தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அபிநய்யும், அவருடைய மனைவியும் பிரிய வில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தற்போது அபிநய் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement