யாருடனும் படக்கனும்னு அவசியமில்லை – பாலாஜி விவகாரத்தில் பிக் பாஸ் 3 நடிகை விளாசல்.

0
21481
balaji
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் பாலாஜி மற்றும் சனம் விவகாரம் தான் பெரும் சர்ச்சையாக வெடித்தது. கடந்த வாரம் திங்கள் கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். மேலும், அப்படி குற்றம் சாட்டப்படும் போட்டியாளர்கள் இருவரையும் கூண்டுக்குள் நிற்கவைத்து நீதிபதியாக சுசித்ரா பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார். பாலாஜி மற்றும் சனம் ஆகி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி புகார்களை எழுதினர். ஆனால், அந்த ப்ரோமோவை நீக்கி இருந்தது விஜய் டிவி.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டி எழுதிய புகாரில் பாலாஜி குறித்து எதோ சர்ச்சையான விஷயத்தை எழுதி இருப்பதால் தான் என்று கூறப்படுகிறது. சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் பாலாஜி,நான் டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக அட்ஜஸ்ட்டமென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையை பயன்டுத்தியதாகவும். யாரோ ஒரு மூன்றாம் நபர் சொன்ன ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்னுடைய நேர்மைக்கு களங்கம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் வெளியானால் கண்டிப்பாக சமந்தபட்ட அந்த பியூட்டி பேஜன்ட் நிறுவனமும் அதில் பங்குபெற்ற அணைத்து பெண் போட்டியாளர்களும் பாலாஜிக்கு எதிராக குற்றம் சாட்ட வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

எனவே, இதனை பெரிதாக்க விரும்பாமல் ப்ரோமோவையே நீக்கியது விஜய் டிவி. அதேபோல நேற்றைய நிகழ்ச்சியில் சனம் பாலாஜிக்கு எதிராக புகார் எழுதிக் கொண்டிருக்கும்போது கூடுதலாக 2 பேப்பரை வாங்கி புகார் எழுதி இருந்தார். அந்த அளவிற்கு பாலாஜி மீது புகார்கள் குவிந்தன. இதனிடையே இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பாலாஜி விஷயத்தில் கண்டிப்பாக விஜய் டிவி தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று பல கண்டங்கள் எழுந்து வருகிறது.

This image has an empty alt attribute; its file name is 1-27-585x1024.jpg

இப்படி ஒரு நிலையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான அபிராமி இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது ஒன்றும் டுபாகூர் pegeant கிடையாது. யாருடனும் படுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு திறமை இருந்தால் மகுடம் சூடலாம் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement