கையை அறுத்துக்கொண்ட பிக் பாஸ் நடிகை. கணவர் செய்த செயல். அவரே வெளியிட்ட வீடியோ.

0
12921
viji
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பரிச்சயமான நடிகைகளில் விஜயலட்சுமியும் ஒருவர். இவர் தேசிய விருது வாங்கிய பிரபலமான இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை-28 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. அதனை தொடர்ந்து அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு, வனயுத்தம், பிரியாணி, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.

-விளம்பரம்-
Wife Should Talk Too Much! Chennai 600028 Trolls Into Real Life ...

சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி என்ற சீரியலில் விஜயலட்சுமி நடித்து வந்தார். பின் சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். மேலும், இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார். விஜயலட்சுமி அவர்கள் 2015ஆம் ஆண்டு பள்ளி நண்பரும், இயக்குனருமான பெரோஸ் முகமதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : ஐயோ ஐயோ போச்சே, தனி ஒருவன் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க வேண்டியது இந்த மாஸ் நடிகர் தானாம்.

- Advertisement -

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விஜயலட்சுமி அவர்கள் 2019 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டும் டும் டும் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்திலிருந்து இடம் பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு விஜயலட்சுமியின் மகன் நடனமாடியுள்ளார்.

விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ் சமையல் செய்து கொண்டே தன் மகன் ஆடும் ஆட்டத்தை உற்சாகத்துடன் பார்த்து உள்ளார். பின் விஜயலட்சுமி தனது கணவர் சமைப்பது குறித்து ‘இந்த ஊரடங்கு பல நடக்காத விஷயங்களை நடத்தி உள்ளது’ என்றும் கிண்டலாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

கொரோனா வைரஸத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நாடே திண்டாடி வருகிறது. மக்கள் அனைவரும் வேதனையிலும் கவலையிலும் உள்ளார்கள். தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 6761 பேர் பாதிக்கப்பட்டும், 206 பேர் பலியாகியும் உள்ளனர். நாளுக்கு நாள் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதையும் பாருங்க : அஜித் பாட்டு, காருக்குள் ஆட்டம். ஊரடங்கை மீறி பிறந்தநாளை கொண்டாடினாரா பார்வதி. வைரலாகும் வீடியோ.

ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கு, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு செயல்களை செய்து வருகிறார்கள்.

Advertisement