பிக் பாஸுக்கு போவ வேணாம்னு சொன்னேன், அந்த லெட்டரை போடாதான்னும் சொன்னேன் – புலம்பி கொட்டிய ஐசுவின் தந்தை.

0
181
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

-விளம்பரம்-
Aishu

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமற்ற நபர்களில் ஒருவர் நிக்சன். இவர் சில ஆல்பம் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் மற்ற போட்டியாளர்களுடன் இவர் சண்டைக்கு சென்றிருக்கிறார். குறிப்பாக, இவர் வினுஷாவை உருவ கேலி செய்திருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறியிருந்தது. இது குறித்து கமலும் கண்டித்திருந்தார்.

- Advertisement -

நிக்சன் – ஐசு காதல்:

அதற்கு பின் இவர் bully கேங்க்குடன் சேர்ந்து கொண்டு செய்த வேலைகள் எல்லாம் அளவே இல்லை.பிறகு அர்ச்சனா, விசித்திரா இருவரையும் நிக்சன் மோசமாக தாக்கி பேசி இருந்தார். இதனாலே இவர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள். அதோடு இந்த சீசனில் நிக்சன் – ஐசு இருவரின் விஷயம் தான் காதல் கண்டன்ட்டாக இருந்து வந்தது. இவர்களின் கதை காதலை போல இல்லாமல் Cringe தனமாக தான் இருந்தது. இவர்கள் இருவரும் செய்த பல செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

சொல்லப்போனால், ஐசுவின் செயல்களால் தங்கள் மானம் போகிறது என்று அவரை வெளியில் அனுப்புமாறு அவரின் பெற்றோர்கள் சேனல் இடம் அழுத்தம் கொடுத்தாகவும், அதனால் தான் அவரை வெளியில் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.அதே போல ஐசு வெளியேறியதில் இருந்து நிக்சன் மீது தான் பல போட்டியாளர்கள் குறை சொன்னார்கள். ஐசு இல்லனா பூர்ணிமா என்று கடைசி சில நாட்களாக பூர்ணிமாவுடன் இவர் சேர்ந்த செயல்கள் இவரது வெளியேற்றத்திற்கு அடித்தளம் போட்டது.

-விளம்பரம்-

ஐசு தந்தை பேட்டி :

பிக் பாஸில் இருந்து வெளிவந்த ஐசு, எந்த ஒரு போட்டியாளரையும் சந்திக்கவில்லை. சமீபத்தில் தான் பேட்டி கூட கொடுத்து இருந்தார். அப்போது கூட நிக்சன் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஐசுவின் தந்தை ‘ இந்த ஷோவே வேண்டாம் என்று நான் எவ்வளவோ படித்து படித்து சொன்னேன். ஆனா அவ என் பேச்சை கேட்காமல் போனால்.

ஏன் இவ்வளவு வன்மம் :

பிக் பாஸுக்கு பின்னர் எங்கள் குடும்பமே மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டோம் ஒரு பத்து இருபது நாட்களுக்கு என்னுடைய இரண்டாவது மகளை கூட நான் கண்டுகொள்ளவே இல்லை. மக்களுக்கு ஏன் இவ்வளவு வண்ணம் ஏன் இப்படி தவறாக கமெண்ட் செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. மேலும், நான் போர்ஸ் பண்ணி தான் ஐசு பிக் பாஸுக்கு பின் அப்படி பதிவு போட்டார் என்று சொல்வது போய் என்றும் கூறியுள்ளார்.

Advertisement