பிக் பாஸுக்கு பின் முதன் முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐசு – இன்னும் அதிலிருந்து மீளவில்லையா?

0
427
- Advertisement -

பிக் பாஸுக்கு பின் முதன் முறையாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் ஐசு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸு, நிக்சனுடன் நெருக்கமாக பழகியது, கண்ணாடியில் முத்தம் கொடுத்தது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் அவருடைய பெற்றோர்கள் பிக் பாஸ் இடத்திற்கே வந்து, என் மகளை வெளியே அனுப்பிவிடுங்கள். குடும்பமானமே போகிறது என்றெல்லாம் புலம்பி அழுந்திருந்தார்கள் என்றும் செய்திகள் வெளியானது. பின் பிக் பாஸ் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

ஐசுவின் வெளியேற்றத்திற்கு இதுவும் காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஐசுவோ அவரது குடும்பத்தினரோ எந்த ஒரு பதிவையும் போடவில்லை. பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் பதிவு ஒன்றை போட்ட ‘ இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் இந்த வாய்ப்பு கிடைக்காத என்று எத்தனையோ ஆயிரம் பெண்கள் ஏங்கிக் கொண்டிருக்கிற எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தாமல் என்னுடைய குடும்பத்திற்கு அவ மரியாதையை ஏற்படுத்தி விட்டேன்.

என் மீது இருந்த மரியாதை நான் எழுந்து விட்டேன்.அர்ச்சனா மணி அண்ணா, யுகேந்திரன் என்று பலர் நான் தவறான விஷயத்தை செய்கிறேன் என்று சொல்லியும் அதை நான் கேட்கவில்லை. கோபம், காதல், பொறாமை, நட்பு ,ஆகியவை என் கண்ணை மறைத்து விட்டது. இந்த விஷயத்தில் என் குடும்பத்தை தயவுசெய்து விட்டு விடுங்கள். இது அனைத்திற்கும் நான் மட்டுமே பொறுப்பு. இந்த நிகழ்ச்சி என்னை என் வாழ்க்கையின் விளிம்பிற்கே தள்ளி விட்டது.

-விளம்பரம்-

ஆனால், என் குடும்பத்தால்தான் நான் தற்போது சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்ட் தூக்கி எதற்காக நான் மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் உன்னை ஏமாற்றி இருக்கக் கூடாது. அதேபோல நிக்ஸனுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.என்னுடைய வெளியேற்றத்திற்கு பின்னர் அவர் நிச்சயம் நன்றாக விளையாடுவார். நான் என்னுடைய செயல்களை நியாயப்படுத்த விரும்புவதில்லை.

நான் தவறு செய்து விட்டேன் 21 வயது பெண்ணிற்கு என்ன முயற்சி இருக்குமோ அதுதான் எனக்கும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் பார்க்கும் பலர் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதை கற்றுக் கொள்வார்கள். ஆனால் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு வாழும் உதாரணம் நான் தான். என்னை மன்னித்து விடுங்கள் அசிங்கத்துடன் ஐஷு’ என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை தொடர்ந்து ஐசு எந்த பேட்டியையும் அளிக்கவில்லை. மேலும், சமூக வலைதளத்தில் கூட எந்த ஒரு பதிவையும் போடவில்லை. இப்படி ஒரு நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இருக்கிறார். அங்கே அவர் உள்ளே சென்ற போது பார்வையாளர்கள் யாரும் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பின்னர் மேடையில் காவாலா பாடலுக்கு நடனமாடிவிட்டு பின்னர் நிகழ்ச்சியில் இருந்து கிளம்பினார் ஐசு. ஆனாலும், முன்பை போல இல்லாமல் ஐசுவின் முகத்தில் ஒரு சோகம் இருந்துகொண்டே தான் இருக்கிறது என்பது அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

Advertisement