42 நாட்கள், நிக்சனுடன் கிசு கிசு, பல சர்ச்சைகளை கடந்த ஐசுவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0
459
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறிய ஐசு வாங்கிய சம்பளம் விவரம் வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 42 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் யாரும் எதிர்பாரா வகையில் பிரதீப்புக்கு Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஐசு வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரவர் பிரபலத்திற்கு ஏற்றார் போல சம்பளம் வழங்கப்படும். இந்த சீசனில் குறைந்தபட்ச சம்பளமே ஒரு நாளைக்கு 20ஆயிரம் ருபாய். அந்த வகையில் ஐசுவிற்கு குறைந்தபட்ச சம்பளம் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஐஷூவிற்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. ஐஷூ பிக் பாஸ் இல்லத்தில் மொத்தம் 42 நாட்கள் இருந்துள்ளார். ஆகையால், இவருக்கு ஜி.எஸ்.டி போக, சுமார் 8 லட்ச ரூபாய் வழங்கப்பபட்டாதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐசு வெளியேறியது நிக்ஸனுக்கு தான் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து இருவரும் நட்பாக பழகி வந்தார்கள். பின் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகுவதை பார்த்து பலருமே காதலிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன்- ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை எழுதி இருந்தார்.

-விளம்பரம்-

பின் ஐசு வரும்போது நெக்சன் ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.அப்போது நிக்ஸன் தனது மைக்கை கழட்டி ஐசுவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர். இந்த வீடியோ பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது.

பின் பிக் பாஸ் கோர்ட் டாஸ்க்கில் கூட ஐசு-நிக்சன் இருவரையும் வைத்து வழக்கு தொடர்ந்து வந்தார்கள். அதற்கு மணி, உன்னை பற்றி எல்லாம் ஐசு சொன்னதை இங்கு நான் சொன்னால் நீ என்ன ஆகுவாய் என்று தெரியாது? என்றெல்லாம் பேசி இருந்தார். மேலும், நேற்று நிகழ்ச்சியில் இருந்து ஐசு வெளியேறியது நிக்சனுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது.யார்கிட்டேயும் தலையீடவே கூடாது. பேசுனா கூட வெளியே லவ் பண்ணுவாங்கன்னு நினைச்சிக்கிடுவாங்கன்னு பயமா இருக்கு. ஒரு பையனும், பொண்ணும் பேசுனா லவ்வா, அது லவ்வா மட்டும் தான் இருக்குமா. அவங்க வீட்டில் புரிஞ்சிக்கணும். பிக் பாஸ்ஸில் சொன்னதெல்லாம் சும்மா ஜோக் தான். ஐஷூவுக்கு இருக்க திறமைக்கு அவள் பெரிய நிலைமைக்கு போவாள் என்று புலம்பி இருந்தார்.

Advertisement