“சர்வாதிகாரி டாஸ்க்” கை நழுவிய “Super Power”..? தப்பமுடியுமா ஐஸ்வர்யா.! இதுதான் காரணமா.!

0
940
Aishwarya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவியாக இருக்கும் ஐஸ்வர்யாவிற்கு இந்த ‘சர்வாதிகார ராணி ‘டாஸ்க் வழங்கபட்டிருந்தது. இந்த பதவி கிடைத்ததும் இவர் செய்து வரும் சில செயல்கள் பிக் பாஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்து வெறுப்பையும் சம்பாதித்துள்ளது. மேலும், டாஸ்க்கை சிறப்பாக முடித்தால் அவருக்கு அடுத்த வாரம் நோமினேஷனில் இருந்து தப்பிக்கும் சூப்பர் பவர் அளிக்கப்படும் என்றும் பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

Bigg-Boss

- Advertisement -

ஆனால், இந்த வாரம் நடைபெற்ற சில சம்பவங்களை வைத்து பார்க்கும் போது ஐஸ்வர்யாவிற்கு சூப்பர் பவர் கிடைக்காது என்பது போல தான் தெரிகிறது. எப்படியெனில் ஐஸ்வர்விற்கு அளிக்கப்பட்ட இந்த ”சர்வாதிகார ராணி” டாஸ்கில் பொதுமக்களாகிய சக போட்டியாளர்கள் அனைவரும் அவரது கட்டளையை ஏற்று நடக்க வேண்டும். அதற்கு சில விதிமுறைகளை ஐஸ்வர்யா உருவாக்கி இருந்தார்.

ராணியின் புகைப்படம், சிலை ஆகியவற்றுக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்று கட்டளை வித்திருந்தனர்.ஆனால், ஷாரிக் , ஐஸ்வர்யாவின் போஸ்ட்டரை கிழித்து, அந்த கட்டளையை தகர்த்தார். பாலாஜி ஐஸ்வர்யாவின் பேச்சுகளை கேட்காமல் ராணியான ஐஸ்வர்யா கூறிய டாஸ்கில் பங்கு கொள்ளாமல் இருந்தது. சென்ட்ரயன், ஐஸ்வர்யாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அது கை களைப்பு வரை சென்று விட்டது. அதுமட்டும் இன்றி இன்றைய ப்ரோமோவில் ராணிக்கு எதிராக மக்கள் அனைவரும் “ராணி ஒழிக” சர்வாதிகாம் ஒழிக என்று கோஷம் போட்டு, கடைசியாக ராணியான ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.இது போன்ற செயல்களாலும் ஐஸ்வர்யா போட்ட விதிகளை பொதுமக்களாகிய சக போட்டியாளர்கள் மீறியதாலும் இந்த டாஸ்க் முழுமையடையவில்லை.

-விளம்பரம்-

Senrayan

இதனால் ஏற்கனவே பிக் பாஸ் அறிவித்திருந்து போல டாஸ்கை சிறப்பாகவும், முழுமையாகவும் முடித்தால் தான் சூப்பர் பவர் ஐஸ்வர்யாவிற்கு அளிக்கப்படும் என்ற விதி இருந்தது. ஆனால், இந்த சர்வாதிகார டாஸ்கில் ஐஸ்வர்யா ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டு வந்தாலும் அவரால் பொதுமக்களாகிய சக போட்டியாளர்களை அடக்க முடியாததால் பிக் பாஸ்ஸின் பார்வையில் இது ஒரு முழுமை பெறாத டாஸ்க்காக தான் இருக்கிறது.

எனவே, ஐஸ்வர்யாவிற்கு ‘சூப்பர் பவர்’ அளிக்கப்படாமலும் போலகலாம். இதன் மூலம் ஏற்கனவே ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருக்கும் சில போட்டியாளர்கள் அவரை நாமினேட் செய்யும் வாய்ப்பும் அதிகமாகவேய இருக்கிறது.ஒருவேளை அவர் அடுத்த வாரம் நாமினேஷனில் வந்தால் அவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் நபராக இருப்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Advertisement