அபிநய்யும் அக்ஷராவும் உறவினர்களா ? வைரலாகும் புகைப்படம் – அதான் அக்ஷரா கதறி கதறி அழுதாரோ ?

0
671
akshara
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 81 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர்.

-விளம்பரம்-

நாமிநேஷனில் இருந்து தப்பித்த போட்டியாளர்கள் :

மேலும், கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அனைவரையுமே நாமினேட் செய்து இருந்தார் பிக்பாஸ். கடந்த அனைவரும் நாமினேட் ஆகி இருந்ததால் நமினேஷனில் இருந்து தப்பிக்க கடந்த வாரம் முழுவதும் பல விதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வந்தது . இதில் முதல் இரண்டு டாஸ்கில் முதல் டாஸ்கில் சிபி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் டாஸ்கில் நிரூப் வெற்றிபெற்றார்.

- Advertisement -

இதன் மூலம் இவர்கள் இருவரும் இந்த வார நமினேஷனில் இருந்து தப்பித்து இருந்தனர். அதன் பின்னர் பல விதமான டாஸ்குகள் நடைபெற்றது. அதில்,ஒரு டாஸ்கில் தாமரை மற்றும் அபிநய் கடைசி வரை விளையாடினர் அதில் தாமரை வெற்றி பெற்று அவரும் நாமிநேஷனில் இருந்து தப்பித்தார். பின்னர் இறுதியாக சஞ்சீவ், ராஜு, பிரியங்கா, அக்ஷரா, வருன், அபிநய், அமீர் ஆகிய 7 பேர் மட்டும் இருந்தனர்.

வெளியேறிய அபிநய் :

இறுதி டாஸ்கில் சஞ்சீவ் , அமீர் காப்பாற்றப்பட்ட நிலையில் ராஜு, பிரியங்கா, அக்ஷரா, வருன், அபிநய் ஆகிய 5 பேர் மட்டும் நாமினேஷனின் இருந்தனர். இதில் குறைவான வாக்குகள் பெற்ற அபிநய் வெளியேற்றப்பட்டார். அபிநய் வெளியேற்றத்தை மிகவும் தாங்க முடியாமல் இருந்தது அக்ஷரா என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

வைரலாகும் புகைப்படங்கள் :

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அபிநய்யிடம் அக்சரா பெரிதாக பேசியது இல்லை. இருப்பினும் அவர் வெளியேறிய போது தனக்கு ஒரு அண்ணன் போல இருப்பவர் அபிநய் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அக்ஷரா, அபிநய் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அக்ஷரா அபிநய் உறவினர்களா :

மேலும், இந்த புகைப்படங்கள் எல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் போல தான் தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அக்ஷரா மற்றும் அபிநய் இருவரும் உறவினர்களோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல அபிநய், அக்ஷரா இருவரும் தெலுங்கு காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement