ஐசுக்கு ஆதரவாக ஒரு பதிவு கூட போடாத அமீர் – ஐசு குடும்பத்துடன் பிரச்சனையா? அவரே சொன்ன காரணம்.

0
545
Amir
- Advertisement -

பிக் பாஸ் பிரபலம் ஐசு குடும்பத்துடன் இதுதான் பிரச்சனை என்று அமீர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அமீர். இவர் நடன இயக்குனர் ஆவார். இவரின் தந்தை இவர் 1வயது இருக்கும் போதே இறந்துவிட்டார். பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டுவிட்டார். யாருடைய ஆதரவும் இன்றி தன் அம்மா ஆசைப்பட்டபடி ஒரு நடன பள்ளியை அமீர் நடித்தி இருக்கிறார். அதில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் தான் ஆலனா, ஆயிஷா. அந்த குட்டி பெண்கள் தான் அமீர் வாழ்க்கையை மாற்றினார்கள்.

-விளம்பரம்-

அதன் பின்னர் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அஷ்ரப் – ஷைஜி என்பவர்கள் தான் அமீரை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று பார்த்து இருக்கிறார்கள். பின் இவர் பல நிகழ்ச்சிகளுக்கு நடனம் சொல்லி இருந்தார். இருந்தாலும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் நடிகை பாவனியை காதலித்தார். பாவனி இவருடைய காதலுக்கு நோ சொல்லிக் கொண்டு வந்தார். விடாது தன்னுடைய காதலை அமீர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

- Advertisement -

அமீர் குறித்த தகவல்:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவரும் பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் நடனம் ஆடிருந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இருவரும் சேர்ந்து விளம்பரம், ஆல்பம், படங்கள் என்று பிசியாக இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த துணிவு படத்திலும் அமீர் -பாவனி சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். அமீர் ஒரு படத்தை இயக்கிக் கொண்டும் வருகிறார். பல படங்களில் நடன இயக்குனராகவும் கமிட் ஆகியிருக்கிறார்.

அமீரை வளர்த்த குடும்பம்:

இந்த நிலையில் அமீரை வளர்த்த அஷ்ரப் குடும்பத்தினர் இடம் அமீர் சண்டையில் இருப்பதாக கூறப்படுகிறது. அமீர் இந்த அளவிற்கு வளர்ந்து நிற்பதற்கு காரணம் அஷ்ரப் குடும்பம் தான் என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறார். தற்போது அஷ்ரப்பின் மூத்த மகன் ஐசு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்சியில் கலந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஐஷு நன்றாக தான் விளையாடி வந்தார். பின் நிக்ஸனுடன் சேர்ந்து இவருடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார். குறிப்பாக, இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து காதலர்கள் செய்வது போல பேசுவது, முத்தம் கொடுப்பது, ஹார்ட் வரைவது போன்ற வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அமீர் அளித்த பேட்டி:

இதனாலே சோசியல் மீடியாவில் ஐஷுவை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டியில் அமீர், நான் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே போனால் வெளியே போட்டியாளர்களுக்கு இருக்கும் பெயரை அப்படியே கொண்டு போய் கொடுப்பேன். அப்போதுதான் அவர்களுக்கு வெளியே நம்முடைய பெயர் என்ன மாதிரி போய்க்கொண்டிருக்கும் என்று தெரியும். பொதுவாகவே போட்டியாளர்களுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாது. உள்ளே இருப்பவர்களில் நாம் நல்லவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நிஜத்தில் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். நாம் கெட்டவர்கள் என்று முகத்துக்கு நேராக திட்டிக் கொண்டிருப்போம். ஆனால், அவர்கள் தான் நல்லவர்கள் என்பது வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தெரியும்.

ஐஷு குடும்பம் குறித்து சொன்னது:

அதேபோல சமீபத்தில் ஐசுவின் குடும்பத்தோடு சண்டை, சோசியல் மீடியாவில் அவர்களை அன்பாலோ செய்து விட்டேன் என்றெல்லாம் செய்திகள் வைரலாகி இருந்தது என்னுடைய ப்ரொபைல் எடுத்துப் பார்த்தாலே தெரியும். ஐசு குடும்பத்தினர் வேண்டுமென்றால் என்னை அன்பாலோ செய்திருக்கலாம். என்னை வளர்த்து விட்டார்களை நான் எப்போதும் மறந்தது கிடையாது. எனக்கு ஒரு சின்ன உதவி செய்தவர்கள் கூட நான் பெரியதாக நினைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் அஷ்ரப் குடும்பத்தினர் அமீரை அன்பாலோ செய்ததற்கு காரணம், ஆரம்பத்திலிருந்து அமீர் பிரதீப்பிற்கு ஆதரவாக பேசி இருந்தார். ஐசு குறித்து வரும் விமர்சனங்களுக்கு அவர் லைக்ஸ் கொடுத்திருந்தார். இதனால் தான் அஷ்ரப் குடும்பத்தினர் அவர் மீது கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement