கண்டிஷனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தும் அமீர் – பாவனி. பள்ளி நிகழ்ச்சிக்கு சென்று கொடுத்த பேட்டி.

0
669
- Advertisement -

தங்களை குறித்து சோசியல் மீடியாவில் எழுந்த சர்ச்சைகளுக்கு அமீர்- பாவனி கொடுத்திருக்கும் விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி- அமீர். பாவனி அவர்கள் ஆரம்பத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
amir

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது. அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமீர்- பாவனி இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி இருந்தார்கள்.

பாவனி- அமீர் படங்கள்:

அதேபோல் அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார் பாவனி. பின் இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்து இருந்தார்கள். அதற்குப் பிறகு இவர்கள் இருவரும் படங்களில் கவனம் செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகிறது. மேலும், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று இவர்களது ரசிகர்கள் கேட்டு கொண்டே இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இருவருமே அடிக்கடி நிகழ்ச்சிகளிலும், அவுட்டிங் செல்வதுமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் சில மாதங்களாக பாவனி- அமீர் இடையே பிரேக் அப் ஆகி விட்டதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-

பாவனி- அமீர் பிரேக் அப் :

இதை பார்த்த உடனே ரசிகர்கள் பலரும் உங்கள் இருவருக்கும் காதல் பிரேக் அப் ஆகிவிட்டதா? என்ன பிரச்சனை? ஏன் பிரிந்து விட்டீர்கள்? கல்யாணம் இல்லையா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியில் பாவனி- அமீர் இருவரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் பேட்டியில் கூறியது, நாங்கள் இருவரும் காதலிப்பதற்கு முன்னாடியே காதலித்திருக்கிறோம் என்ற செய்திகள் வந்தது. நாங்கள் கல்யாணம் செய்து விட்டோம். பாவனி கர்ப்பமாக இருக்கிறார். அதற்குப் பிறகு நாங்கள் பிரேக் அப் பண்ணி விட்டோம் என்றெல்லாம் செய்திகள் வருகிறது.

சர்சைகளுக்கு பாவனி- அமீர் கொடுத்த விளக்கம்:

அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் லிவிங்க் டுகெதரில் இருந்தோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அப்போது இல்லை இப்பதான் நாங்கள் லிவிங்க் டுகெதரில் இருக்கோம். அதுவும் இரண்டு குடும்பமும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். நாங்கள் இருவரும் கேரியரில் சாதித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம். இப்போது நான் ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன். அதேபோல் சினிமாவிலும் கோரியோ கிராஃப் செய்து கொண்டிருக்கிறேன். அதேபோல் பாவனி வெப் சீரிஸ், தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் இருவரும் பிரிய மாட்டோம். நாங்கள் காதலித்துக் கொண்டுதான் இருப்போம் என்று பேசி இருக்கிறார்கள்.

Advertisement