ஆரியிடம் உதட்டை கடித்து எச்சரித்த அனிதா – கடுப்பாகி கில்லி பட நடிகை போட்ட கமன்ட்.

0
161618
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11வது வாரத்தை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகிய 8 பேர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று அர்ச்சனா வெளியேறினார். கடந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். எனவே, கடந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.இதில் எதிர்பார்த்தது போலவே நேற்றய நிகழ்ச்சியில் அர்ச்சனா தான் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது. இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ‘மாட்னயா நீ ‘ என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்ட்டு இருந்தது. இதில், இதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு சீட்டை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் கேள்வியை கேட்க வேண்டும். இப்படி ஒரு நிலையில் ஷிவானி, ஆரியிடம் ‘இந்த வீட்டில் யார் Demotivated -அ இருகாங்கனு நீங்க feel பண்றீங்க என்று கேட்டிருந்தார்’ அதற்கு ஆரி, அனிதாவின் பெயரை சொல்லி, எங்க வீட்டில் என்ன நினைத்தகொள்வார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு அனிதாவின் கணவர் பிரபா பெயரை சொல்லியுள்ளார்.

- Advertisement -

ஆனால், ஆரி இப்படி பேசி முடித்ததும் அனிதா, என்னுடைய அம்மா, அப்பா, குடுமபத்தினர் பற்றி பேசாதீர்கள் என்று சொல்கிறார். அதற்கு ஆரி, நான் பேசி முடித்த பிறகு தான் முடியும் நான் என்ன சொல்ல வந்தேன் என்று கூற, அதற்கு கடுப்பான அனிதா , என் புருஷன் பற்றியும், அம்மா அப்பா பற்றியும் பேசாதீர்கள் ஆரி, என்று கையை நீட்டி உதட்டை கடித்து எச்சரிக்கை செய்துள்ளார்.

அனிதாவின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்து அனிதாவை விமர்சித்துள்ளார் நடிகை ஜெனிபர்.கில்லி படத்தில் விஜய்க்கு தங்கச்சி கேரக்டரில் நடித்தவர் ஜெனிபர்.கில்லியில் காமெடி ரோலில் அசத்தியிருப்பார். அந்த படத்தில் அடிக்கடி தன் அப்பாவிடம் விஜயை மாட்டிவிட்டு திட்டு வாங்க வைப்பார். பின்னர் விஜயிடம் அடிக்கடி தலையில் குட்டு வாங்குவார். இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அனிதாவின் பேச்சை பார்த்துவிட்டு அந்த ப்ரோமோவிற்கு கீழே ‘இவ பொலம்புனத தான ஆரி சொன்னாரு , அதுக்கு ஏன் இவ்ளோ சீனு ‘ என்று கழுவி ஊற்றியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement