சித்ராவின் இறப்பு குறித்து அனிதா சம்பத் – அப்போ மத்த யாருக்குமே தெரியாதா.

0
119039
chitra
- Advertisement -

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து அனிதா சம்பத் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்ளுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அந்த வகையில் அனிதா சம்பத்தும் ஒருவர். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தர்பார், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதற்கு முன்பாக இவருக்கென்று சமூக வலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கல் கூட உருவானது. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

-விளம்பரம்-
chitra

ஆரம்பத்தில் இவருக்கு பல ஆதரவுகள் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இவருக்கு ஹேட்டர்ஸ்களும் அதிகமானார்கள். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சில நாட்களில் இவரது தந்தையும் காலமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அனிதா சம்பத் தனது ராசிர்கள் அனுப்பி இருந்த சில மெசேஜ்களுக்கு பதில் அளித்து இருந்தார். அந்த வகையில் மறைந்த நடிகை சித்ராவின் இழப்பு குறித்து ரசிகர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அனிதா. அதில் நான் வீட்டிற்கு வந்தவுடன் அந்த செய்தியை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

- Advertisement -

அவரை நேரில் பார்த்தது இல்லை ஆனால் அவருடைய இறப்பு பற்றி கேட்டதும் மிகவும் மனம் உடைந்தேன் என்று கூறியுள்ளார் அனிதா சம்பத். இதை வைத்து பார்க்கும்போது சித்ரா மறைவு பற்றி பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர் யாருக்குமே தெரியாது என்பது போலத்தான் தெரிகிறதுபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.

This image has an empty alt attribute; its file name is 1-14-576x1024.jpg

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பதிலாக, பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா புதிய முல்லையாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement