நான் ரம்யாவ குறிப்பிட்டு சொல்லல – கடுப்பாகி அனிதா சம்பத் சொன்ன விளக்கம்.

0
11629
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-163.jpg

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் முடிந்துவிட்டது எனவே பெண் போட்டியாளர்களை அவதூறாக பேச வேண்டாம். அனைத்து பெண்களையும் மதிப்பது நம் அனைவரின் கடமை. எனவே, இதுபோன்ற செயல்களை நிறுத்துங்கள் என்று ரம்யா பாண்டியனின் ரசிகர் பக்கம் ஒன்று பதிவிட்டு இருந்தது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ள அனிதா சம்பத், ஆம் இது ஒரு விளையாட்டு மட்டும்தான். அது முடிந்துவிட்டது. தினமும் நாம் 18 போட்டியாளர்களுடன் இருக்க மாட்டோம். அதனால் அப்படி ஒரு அழுத்தமான சூழல் தினமும் அனைவருக்கும் இருக்காது. எனவே, அங்கே வெளிப்பட்ட குணங்கள் அனைவருக்கும் தினமும் வெளிப்படாது.

- Advertisement -

ஒரு அழுத்தமான சூழலில் தான் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டோம்.எண்ணற்ற போட்டியாளர்கள் அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளர்கள் எதிர்மறையான கமெண்ட்டுகளால் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். கேலி செய்பவர்கள் இதன் மூலம் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க போவது கிடையாது. ஒரு மெசேஜ் போட்டுட்டு நீங்க வேற வேலை பார்க்க போயிடுவீங்க. ஆனால், அந்த மெசேஜய் பாக்குறவங்க மனதை விட்டு போகாது ரொம்ப காலம் அது அவர்களை பாதிக்கும். எல்லாரும் அவங்கவங்க தவறிலிருந்து பாடம் கத்துப்பாங்க. மாத்திப்பாங்க. பிக்பாஸ் ஒன்றும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி கிடையாது.

ஒவ்வொரு கணமும் நீங்கள் பிக் பாஸ்ஸை என்ஜாய் பண்ண முடியாது. ஒரு விளையாட்டா மட்டும் பாருங்க. அனைத்து போட்டியாளர்களும் அவர்கள் குடும்பத்தாருடன் வாழ்க்கையை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். ஆனால், அனிதா சம்பத்தின் இந்த பதிவை ரம்யா பாண்டியனை திட்டியதர்க்கா பதிலடி கொடுத்துள்ளார் என்று சில மீடியாக்கள் எழுத, யாரையும் காயப்படுத்த வேண்டாம்னு தான் சொன்னேன். ரம்யானு குறிப்பிட்டு சொல்லவே இல்ல என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் அனிதா.

-விளம்பரம்-
Advertisement