Breaking News : அனிதா சம்பத்தின் தந்தை இரயிலில் மரணம் – இப்படி ஒரு சோகமா.

0
3638
anitha
- Advertisement -

செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான அனிதா சம்பத்தின் தந்தை காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 86 நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, கடந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.இப்படி ஒரு ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தது போல அனிதா தான் இந்த வாரம் வெளியேறி இருந்தார். உண்மையில் இந்த வாரம் ஆஜீத் அல்லது ஷிவானி தான் வெளியேற்றப்புடுவார்கள் தான் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அனிதா கடந்த வாரம் ஆரி, பாலாஜி போன்றவர்களுடன் செய்த வாக்குவாதத்தில் தான் வெளியேறினார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவை போட்டு இருந்த அனிதா சம்பத், இதுக்கு மேல என்ன வேணும்..யாருக்கும் சொம்பு தூக்காம உண்மையா இருந்துட்டு வந்துருக்கேன். safe கேம் விளையாடள, favouritism காமிக்கள, உடம்பை காமிக்கள, காசு கொடுத்து ப்ரோமோஷன் பேஜ் இல்லை. என்னோட பேஜ்ஜில் இருந்து மற்ற போட்டியாளர்களை பற்றி அவதூறாக பேசல, எனக்கு நெருக்கமானவர்களின் தவறை சுட்டிகாட்டி இருக்கிறேன். அதை நினைத்து பெருமையடைகிறேன்.

இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்தின் தந்தை காலமாகி இருக்கிறார். இந்த தகவலை அனிதா சம்பத்தின் கணவர் பிரபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தரிசனத்திற்காக தனது மகனுடன் சீரடி சென்ற ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்படுகிறது. அனிதா சமபத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஒரு சில தினங்கள் தான் ஆகிறது. ஆனால், அதற்குள்ளாகவே அவரது வீட்டில் இப்படி இழப்பு நடைபெற்றுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement