ஆரி, தான் இந்த வாரம் எலிமினேஷன். அதுக்கு தான் அவருக்கு 10 ஆயிரம் கொடுத்திருக்காங்க – யார் சொல்றது பாருங்க. Unseen வீடியோ.

0
16493
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் என்பது ஒரு நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நபர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் நடிகரானஆரியும் ஒருவர். நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஆரி. அதன் பின்னர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நெடுஞ்சாலை திரைப்படத்திற்குப் பின்னர் இவர் நடித்த எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டிருக்கிறார். நடிகர் ஆரி ஆரம்பத்தில் இருந்தே அதிகம் பேசுகிறார், மற்றவர்களுக்கு நிறைய அறிவுரைகளை கூறுகிறார் என்று பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பல போட்டியாளர்களும் இவருக்கு முத்திரை குத்தினார்கள்.

- Advertisement -

அதற்கேற்றார்போல ஆரி பலமுறை நாம் ஏன் ஆகியும் இருக்கிறார். ஆனால், இதுவரை மக்களால் காப்பாற்றப்பட்டும் வருகிறார். அதே இந்த வாரம் ஆரி நாமினேஷனில் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியின் Unseen வீடியோவில் ஆரி தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என்று அனிதா சம்பத்திடம் ரம்யா பாண்டியன் கூறிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆரி, இந்த வாரம் வெளியில் செல்வதால் தான் அவருக்கு 10 ரூபாய் பரிசு கொடுத்து இருகாங்க என்று காமெடி செய்துள்ள ரம்யா பாண்டியன்.

Image

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல்வேறு தனியார் வலைதள பக்கங்களில் நடைபெற்றுவரும் வாக்கெடுப்பில் அனிதா சம்பத்திற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement