என்னது, தனது தந்தைக்கு அனிதா சம்பத் 10 ஆம் வகுப்பில் fees காட்டினாரா ? அனிதா சம்பத் தந்தை செய்த கமண்டால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
1780
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் இரன்டு வாரங்களை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் இருக்கின்றார்கள் அதில் அனிதா சம்பத் ஒருவர் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பின்னர் காப்பான் சர்க்கார் தர்பார் போன்ற பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

பிக்பாஸில் அனிதாவை பார்த்த பலரும் அட இவங்க மிகவும் ஸ்வீட்டான பொண்ணுங்க என்று நினைத்தார்கள். ஆனால் வந்த ஓரிரு நாட்களிலேயே சுரேஷுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அனிதா சம்பத் ரசிகர்களை கொஞ்சம் அப்செட் அடைய வைத்தார். அதிலிருந்து அனிதா சம்பத் மீது ஒரு சில விமர்சனங்களும் எழுந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளின்போது பிக்பாஸ் மேடையில் பேசிய அனிதா, தன்னுடைய தந்தை எழுத்தாளர் என்றும் ஆனால் அவருக்கு பெரிய பிரபலம் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதேபோல கடந்த வந்த பாதை டாஸ்கின் போது தனது குடும்பத்தினர் பற்றி பேசிய அனிதா தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை கூறியிருந்தார்.

- Advertisement -

அதேபோல ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் நபர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இவரின் இந்த பேச்சு பலரை கவர்ந்தாலும் ஒரு சிலர் இவரது நீளமான பேச்சை விமர்சித்து வந்தனர். அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனிதாவின் பெற்றோர்கள் பேசுகையில், வனிதா சொன்னது அனைத்தும் உண்மை தான். அவள் சின்ன வயதில் பல கஷ்டங்களை சந்தித்து உள்ளார். அவள் எதையும் எங்களிடம் மறைத்தது கிடையாது. சுரேஷ் அனைவரிடமும் ஒரே மாதிரி தான் பேசுகிறார். பார்க்கவும் நல்ல மனிதர் போலத்தான் தெரிகிறார். ஆனால் எச்சில் தெறிக்கும் என்கிற வார்த்தையை தவிர்த்திருக்கலாம். அனிதாவை வணிதாவுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.அவங்க இந்த மாதிரி நிலைமையில் இருந்தால் அழ மாட்டாங்க தைரியமாக இருப்பாங்க. இது அழுவுது. சின்னப்பிள்ளை இல்லையா என்று கூறி இருந்தனர்.

anitha

இப்படி ஒரு நிலையில் அனிதா குறித்து யூடுயுபில் அவரது தந்தை செய்துள்ள கமன்ட் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் நாக்குல நரம்பு இல்லாமல் பேசாதீங். அனிதா சம்பத் எனக்கு தெரிஞ்சவங்க. நான் பத்தாம் வகுப்பில் பீஸ் கட்ட காசு இல்லாம ஆறுமாசம் கட்டினால்தான் எக்ஸாம் எழுத முடியும்னு ஸ்கூல்ல சொன்னாங்க. அப்போ அனிதா சம்பத் அவங்க தான் எனக்கு பீஸ் காட்டுனாங்க. அப்புறம் நான் எக்ஸாம் எழுதின. ஒரு வார்த்தை தெரியாம பேசிட்டாங்ன்னு அவங்கள கெட்டவன்னு மாதிரி குத்தாதீங்க மக்களே என்று யூட்யூபில் கமன்ட் பதிவாகி இருந்தது.

-விளம்பரம்-

ஆனால் இந்தப் பதிவு சம்பத் ஜி என்பவர் கணக்கிலிருந்து பதி விடப்பட்டிருந்தது. சம்பத்து வேறு யாரும் கிடையாது அது அனிதா சம்பத்தில் தந்தைதான். இதனால் இந்த கமெண்ட்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள ரசிகர்கள், அனிதா சம்பத்தின் தந்தையை திட்டித் தீர்த்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த கமெண்ட்டை அனிதா சம்பத்தின் தந்தைதான் போட்டாரா அல்லது அவரது புகைப்படத்தை வைத்து அவரது பெயரில் யூடியூப் கணக்கை உருவாக்கி இப்படி யாராவது செய்தார்களா என்பது தெரியவில்லை.

Advertisement