இதபத்தி மட்டும் கவலைப்படுங்க, பெற்றோருக்கு பிக் பாஸ் அர்ச்சனாவின் அட்வைஸ். எதுக்கு பாருங்க.

0
467
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை விளங்குகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் பல ஆண்டு காலமாக மிகப்பிரபலமான தொகுப்பாளினியாக திகழ்பவர் அர்ச்சனா. இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்திகளில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கினார்.

-விளம்பரம்-

பின் அர்ச்சனா சன் தொலைக்காட்சிக்கு சென்றார். அங்கு இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சில வருடம் இவர் மீடியாவில் இருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு 2009 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின் விஜய்யில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல வருடமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அர்ச்சனாவுக்கு ஜீ தமிழ் சிறந்த தொகுப்பாளர் என்ற விருதையும் வழங்கி இருக்கிறது. பின் மீண்டும் இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார். மேலும், 2020 ஆம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா போட்டியாளராக நுழைந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா செய்தது:

நிகழ்ச்சியில் இருந்து அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாட விடாமல் தடுத்து வந்தார் என்று பல்வேறு விமர்சனங்கள் கூட எழுந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. இருந்தாலும் அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய கேரியரில் கவனம் செலுத் தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த டாக்டர் படத்தில் அர்ச்சனா நடித்திருந்தார்.

Bigg Boss Archana's daughter responds to the hater comments

அர்ச்சனா நடித்த படம்:

இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களிலும் நடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் இஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதே போல இவர் வாவ் லைப் என்ற யூடுடுயூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த சேனலில் அர்ச்சனா தனது தங்கை மற்றும் தனது மகளுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார். இவருடைய வீடியோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் இவரை நிறைய பேர் பாலோஸ் செய்கிறார்கள்.

-விளம்பரம்-

அர்ச்சனா பதிவிட்ட பதிவு:

அதிலும் தன்னுடைய பொது வேலை, அன்றாட வாழ்க்கை பற்றிய அப்டேட்ஸ்களையும் அர்ச்சனா அப்லோட் செய்து வருகிறார். இந்த நிலையில் அர்ச்சனா அவர்கள் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், பல மாதங்களாகவே மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று கொண்டு இருக்கும் நிலையில் இறுதித் தேர்வை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதனால் தேர்வு பயம் குறித்தும், தேர்வில் வெற்றி பெறுவது குறித்தும் அதிகம் உள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேர்வுகளை பற்றிய கவலையில் உள்ளார்கள்.

பெற்றோர்களுக்கு அர்ச்சனா சொன்ன அறிவுரை:

இது தொடர்பாக தான் தற்போது அர்ச்சனா இன்ஸ்டாவில் பதிவு போட்டு இருக்கிறார். அதில் அவர், தேர்வு பதற்றம் அல்லது மன அழுத்தத்தை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவது எளிதானது அல்ல. ஆனால், என் மகள் அவரது ஸ்டைலில் இதை எதிர் கொள்கிறார். இதனால் ஒரு அம்மாவாக பெருமை கொள்கிறேன். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் தங்கள் தேர்வுகளுக்கு தயாராக அதற்காக எடுக்கும் முயற்சிகளை பற்றி மட்டுமே கவலைப்படுங்கள். முடிவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கடின உழைப்புக்கு எப்போதும் பலன் தரும் என்று,ம், இல்லை என்றால் நிச்சயம் நாளை என்று குறிப்பிட்டார். இப்படி அர்ச்சனா பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவின் பதிவிற்கு கமெண்ட்களை போட்டு பாராட்டி வருகின்றனர்.

Advertisement