அர்ச்சனா – ஆரியின் பொங்கல் பஞ்சாயத்து. யார் சொன்னது உண்மை. இந்த குறும்படத்தை நீங்களே பாருங்க.

0
77305
aari
- Advertisement -

நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரியின் பேச்சு தான் ஹைலைட்டாக இருந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரம் சுவாரசியம் குறைவாக இருந்த இரண்டு போட்டியாளர்களை பிக் பாஸ் தேர்வு செய்ய சொன்னார். இதில் சொல்லி வைத்தது போல அர்ச்சனா குரூப் அனிதா மற்றும் ஆரி பெயரைத்தான் சொன்னார்கள் இதனால் கடுப்பான தன்னுடைய கருத்தை முன்வைத்தார் இந்த வீட்டில் குருபீசம் இருக்கிறது என்றும் அவரவருக்கு பிடித்த போட்டியாளரை காப்பாற்ற வேறு ஏதாவது ஒரு போட்டியாளர் பலி கொடுக்கப்படுகிறது என்றும் ஓபனாக பேசினார் ஆரி. அதேபோல இந்த வீட்டில் யார் யார் எங்கெங்கே என்னென்ன பேசுகிறார்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை தன்னால் நெத்தி பொட்டில் அடித்தது போலக் கூறமுடியும் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இதனால் இவருக்கும் அர்ச்சனா குரூப்பிற்க்கும் ஆரிக்கும் கொஞ்சம் பிரச்சினை ஏற்பட்டது. அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைவருக்கும் இரண்டு சப்பாத்தி என்று சொல்லிவிட்டு ரியோவிற்கு மட்டும் மூன்று சப்பாத்தி அர்ச்சனா கொடுத்தார் என்றும் ஆனால் தான் 3 சப்பாத்தியை எடுக்கும் போது அனைவருக்கும் இரண்டு சப்பாத்தி தான் என்றும் அர்ச்சனா சொன்னதாக கூறினார் ஆரி. அதேபோல நேற்று அனைவருக்கும் ஆரி பொங்கலை பரிமாறிக் கொண்டிருக்கும்போது ஆஜீத்திற்கு பொங்கல் வைக்கும் போது போதுமா இன்னும் கொஞ்சம் வைக்கட்டா என்றுதான் கேட்டிருந்தார், அருகிலிருந்த சோம் கூட கூட நல்லா சாப்பிடுடா என்று சொன்னார்.

- Advertisement -

ஆனால் இதனை அர்ச்சனா மற்ற போட்டிகளில் இடம் ஆரி சாப்பாட்டிற்கு கணக்கு பார்க்கிறார் என்பது போல கூறிவிட்டார். இதுபற்றி சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அர்ச்சனா பேசும் போது இது போதுமா இன்னும் கொஞ்சம் சாப்புடுவயானு கேக்கறாரு, எவனாவது தட்ல சாப்பாட போட்டு இது போதுமா இன்னும் வேணுமா என்று கேப்பானா. மேலும், சாப்பாடு விஷயத்தில் மட்டும் பங்கம் சொன்னா என் மனசு தாங்காது. இன்னிக்கி போய் அந்த ஆள வச்சி செய்கிறேன் என்று கூறி இருந்தார் அர்ச்சனா. இனிமேல் கிட்சன் பக்கம் வந்தா செருப்பால அடிங்க என்று பேசிவிட்டு கோபமாக கிளம்பினார்.

இப்படி ஒரு நிலையில் நேற்று ஆரி, ஆஜீத்திற்கு பொங்கல் வைக்கும் போது என்ன நடந்தது என்பதற்கான குறும்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆரி, அஜீத்திற்கு பொங்கல் வைக்கும் போது ‘போதுமா இன்னும் கொஞ்சம் வைக்கவா’ என்று தான் கேட்கிறார். ஆனால், அர்ச்சனா சொல்லும் போது ஆரி, இது போதுமா இன்னும் கொஞ்சம் சாப்புடுவயானு கேட்டதாக சுரேஷிடம் கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement