அர்ச்சனா – நிஷா சண்டை. சிவனேனே வேடிக்க பார்த்த ஷிவானிக்கு விழுந்த அடி. இந்த வீடியோவ பாருங்க.

0
9404
shivani
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது . அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும்.ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார் என்றும் மனிதர்கள் டீம், இயந்திரங்களாக மாறியவர்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்து இருந்தார்

-விளம்பரம்-

நேற்று வெளியான நிகழ்ச்சியில் அர்ச்சனா, கேப்ரில்லா, பாலாஜி, சோம் சேகர், ரம்யா பாண்டியன், ஜித்தன் ஆகிய 6 பேர் ரோபோவாக இருந்தனர். இதில் பெரும்பாலானோர் அர்ச்சனாவை தான் டார்கெட் செய்தனர். அர்ச்சனா முகத்தில் முட்டையை பூசிக்கொள்ளும்படி கூட சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அர்ச்சனா சிரித்துவிட்டார் என்று ஒரு ஹார்டை பிரித்தனர். பின்னர் அவரிடம் இருந்து சோகம் அல்லது கோபம் என்று ஏதாவது உணர்வை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று நிஷா எவ்வளவோ போராடினார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் மறைந்த அர்ச்சனாவின் தந்தை கேட்டு அர்ச்சனாவை சோகமடையச் செய்ய முயற்சித்தார் நிஷா. ஆனால், அப்போதும் அர்ச்சனா அசரவே இல்லை. இருப்பினும் அவர் முகம் சுகமாகனது என்று மற்றொரு ஹார்ட்டையும் பறித்தனர், ஆனால், இந்த டாஸ்க்கின் போது கடுப்பான அர்ச்சனா ஒரே நேரத்தில் 6 பேரும் வந்து பேசினால் என்ன செய்வது என ரியோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார் .அப்போது ரியோ விளக்கம் கூற முயன்ற நேரத்தில், நீ என்னை நம்பமாட்டாய் நன்றி எனக்கூறி அறைக்குள்சென்றார்.

அவரை சமாதானப்படுத்த சென்ற பாலாஜி, இது ஒரு கேம் டென்ஷன் ஆக வேண்டாம் என கூறுகிறார், அப்போது அர்ச்சனா “என் தந்தை மரணம் விளையாட்டு அல்ல” என்று மிகவும் ஆக்ரோஷமாக கத்தி பேசி இருந்தார் அர்ச்சனா. பின்னர் இந்த டாஸ்க்கிற்கு என் அப்பாவின் மரணம் தான் கிடைத்ததா நிஷா என்று அர்ச்சனா கூறியதால், நிஷா அவரை சமாதானம் செய்ய பார்த்தபோது அவரும் கொஞ்சம் ஆவேசமாக பேசினார். அப்போது நிஷாவிற்கு பின்னால் சிவனேனு நின்று கொண்டு இருந்த ஷிவானி மீது நிஷாவின் கை கொஞ்சம் பலமாக பட்டது. இதனால் அந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றார் ஷிவானி.

-விளம்பரம்-
Advertisement