பற்கள் சீரமைப்பு சிகிச்சை செய்துகொண்டுள்ள அர்ச்சனா – அதுக்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
806
Archana
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி,ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே பரபரப்பாக சென்று இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். அதோடு கடந்த வாரம் 5 Wild கார்டு போட்டியாளர்கள் நுழைந்து இருந்தார்கள். அதில் கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். Wild Card போட்டியாளர்கள் நுழைந்ததில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இதனால் Wild Card போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டார் டார்கெட் செய்ய துவங்கிவிட்டனர். அந்த வகையில்
அவர்களை சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு பிக் பாஸ் வீட்டார் அனுப்பி விட்டார்கள். தற்போது இரண்டு வீட்டிலுமே போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு ஒருவரை தாக்கி கொண்டிருக்கிறார்கள். மேலும், முதல் நாளே நிகழ்ச்சியில் ஆத்திரம் தாங்க முடியாமல் அர்ச்சனா அழுதுவிட்டார். பின் எனக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் அர்ச்சனா கடந்து வந்த பாதை குறித்து அளித்த பேட்டியில், என்னுடைய அப்பா காலேஜ் புரொஃபஸர். அதனால் தான் எங்கள் வீட்டில் எப்பவும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பார். எனக்கு ஒரே ஒரு தங்கை. சிறுவயதிலிருந்தே டிவி பார்க்கும் போது இது மாதிரி நாமும் ஒரு நாள் டிவியில் வரணும் என்று ஆசைப்பட்டேன். ஸ்கூல், காலேஜ் எல்லாம் வைக்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வேன். கல்ச்சுரல்ஸ் வந்துட்டாலே என்னிடம் கேட்காமல் என் பெயரை கொடுத்து விடுவார்கள்.

-விளம்பரம்-

அப்படித்தான் ஆதித்யா டிவியில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு நான் பண்ணின டப்ஸ்மாஷை போட்டிக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். பின் வீட்டில் அழுது அடம் பிடித்து கலந்து கொண்டேன். எங்க அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட். நானும் என்னோட பெஸ்ட் கொடுத்தேன். எதிர்பாராமல் அந்த நிகழ்ச்சியில் நான் டைட்டில் வின் பண்னேன். அதற்குப் பிறகு என்னை ஆங்கரிங் செய்ய சொன்னார்கள். அப்படித்தான் ஆதித்யா டிவியில் ஆங்கரிங் கேரியர் தொடங்கியது.

இருந்தாலும் என்னுடைய போட்டோவை பார்த்து தான் பிரவீன் சார் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க வைத்தார். இந்த தொடரின் மூலம் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது என்று பல விஷயங்களைப் பகிர்ந்து இருந்தார். மேலும், இவர் சீரியலில் இருந்து விலகியத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி இருந்தது. ராஜா ராணி 2 தொடரில் நடிப்பதற்கு முன்பாக அர்ச்சனாவின் பற்கள் சீராக இல்லாமல் தான் இருந்துள்ளது. அதன் பின்னரே அவர் பற்கள் சீரமைப்பு சிகிச்சை செய்துகொண்டு இருக்கிறார். அந்த சிகிச்சைக்கு முன்னர் அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்க.

Advertisement