சோம் சேகரை மாமா என்று சொன்ன அர்ச்சனா – விமர்சித்த கமல் பட நடிகைகள்.

0
1018
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகிய 6 பேர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவித்து நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டு இருந்தனர். இந்த சீஸனில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக அர்ச்சனா மற்றும் சுசித்ரா நுழைந்து இருந்தார்கள். இதில் சுசித்ரா ஏற்கனவே வெளியேறி விட்டார். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

-விளம்பரம்-

கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். இவர் உள்ளே நுழைந்த நாள் முதலே தனக்கான ஒரு குழுவை அமைத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் மேலும் இவர் எதை செய்தாலும் சரி என்று சொல்வதற்காகவே இருப்பது போல தான் ரியோ, நிஷா, சோம் ஆகியோர் இருக்கின்றனர்.

- Advertisement -

அர்ச்சனா, தனது குழுவில் இருக்கும் யாரையும் தனியாக விளையாட விடமால் தொடர்ந்து தடுத்து வருகிறார். அதனால் தான் இவரது குழுவில் இருக்கும் மற்ற போட்டியாளர்களின் தனித்துவம் வெளியில் வராமல் இருந்து வருகிறது சொல்லப்போனால் கடந்த வாரம் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா வெளியேறியதற்கு காரணமே அர்ச்சனா அவர்களை கைபாகையாக மாற்றிவிட்டார் என்பதால் தான் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று நேற்று சோம் சேகரை மாமா என்று சொன்னது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

கடந்த வாரம் சுவாரஸ்யம் குறைவான போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்றது அப்போது ரியோ அனிதாவைசுவாரசியம் குறைவான போட்டியாளராக தேர்ந்தெடுத்தார். ஆனால், அதற்கு அவர் சொன்ன காரணம் அனிதாவிற்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் அவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் அனிதா. இந்த விவகாரத்தில் கமல் கூட தன்னுடைய கருத்தை தெரிவித்து இருவருக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைத்தார்.

-விளம்பரம்-

ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் மிகவும் வெளிப்படையாக நடந்தது. அப்போது இந்த பிரச்சனை குறித்து பேச மீண்டும் அனிதா மற்றும் ரியோவிற்கும் பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனைக்கு பின்னர் சோம் சேகரிடம் அனிதா பேசிக் கொண்டு இருக்கும்போது ரியோவிடம் தான் தனியாக பேச விரும்புவதாக சொல்லுமாறு கூறியிருந்தார். இதனால் சோம் சேகரம் ரியோவிடம் சென்று அனிதா உங்களிடம் பேச வேண்டும் என்று கேட்கிறார் என்று சொன்னார். அப்போது அருகில் இருந்த அர்ச்சனா நீ தான் அவருக்கு தூதுவரா ? நீ என்ன மாமா வா என்று மிகவும் அவதூறாக பேசினார்.

ஆனால் அர்ச்சனா அப்படி சொன்னதை சோம் சேகர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அடுத்த கணமே இருவரும் சகஜமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அர்ச்சனா சொன்ன இந்த வார்த்தையை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான ஸ்ரீபிரியா ‘தூது போகிறவர் எல்லாம் மாமா வா’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்திருக்கும் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் மான கஸ்தூரி அனுமன் வகையறா னு சொல்லாம விட்டார்களே என்று ட்வீட் செய்துள்ளார்.

Advertisement