பாத் ரூமில் தனது மகளுக்கு விக்ரம் செய்த விஷயம் – மன வருத்தத்துடன் பேசிய அர்ச்சனாவின் தந்தை. டைட்டில் வின்னரா இப்படி?

0
317
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 78 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, அன்னயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தனர். பின் நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருந்தனர். குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

பின் கடந்த வார நாமினேஷனில் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே கூல் சுரேஷ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். அதோடு கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததது. இதனால் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து கூல் சுரேஷ் வெளியேறி இருக்கிறார். பின் இந்த வாரம் கேப்டன் யாரும் இல்லை. அனைவருமே என்று பிக் பாஸ் சொன்னார். இதனால் போட்டியாளர்கள் குஷி ஆகி விட்டார்கள்.

ப்ரீஸ் டாஸ்க்:

அதன் பின் நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் விசித்ரா, ரவீனா, விக்ரம் ஆகியோர் பெயர் இடம் பிடித்து இருக்கிறார்கள். இதில் கண்டிப்பாக இந்த வாரம் விக்ரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வந்த வாக்குகளின் அடிப்படையில் விக்ரம் தான் குறைந்த வாக்குகள் பெற்றிருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் இன்று நடைபெற இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார்கள். இதனால் இன்று பிக் பாஸ் வீடே எமோஷனல் ஆகி இருக்கிறது.

-விளம்பரம்-

அர்ச்சனா பெற்றோர்கள்:

அந்த வகையி பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனாவின் பெற்றோர்கள் வந்து இருக்கிறார்கள். இதை பார்த்தவுடன் அர்ச்சனா தன்னுடைய அம்மா அப்பாவை கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார். பின் அனைவரிடமும் தன்னுடைய அம்மா அப்பாவை அறிமுகம் செய்திருக்கிறார். அவர்களும் நிகழ்ச்சி குறித்து சில விஷயங்களை எல்லாம் பகிர்ந்து இருக்கிறார்கள். அப்போது அர்ச்சனா அப்பா, கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று விக்ரமனுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். காரணம், விசித்ரா- அர்ச்சனா இடையே சில மிஸ்அண்டர் ஸ்டாண்டிங் நடந்துகொள்ளும் போது பாத்ரூமில் அர்ச்சனா புலம்பி கொண்டிருந்தார்.

மன்னிப்பு கேட்ட மாயா-பூர்ணிமா:

விக்ரம், அக்ஷயா இருவரும் சேர்ந்து அவளுக்கு தெரியாமல் பின்னாடி கிண்டல் கேலி செய்திருந்தீர்கள். நீங்கள் ஒருவருக்கு உதவி செய்ய வில்லை என்றாலும் அவர்களுடைய கஷ்டத்தை கேலி செய்யாதீர்கள் கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் விக்ரம் சாரி, நாங்கள் விளையாட்டாக செய்தது என்றெல்லாம் பேசி இருந்தார். அதற்குப் பிறகு மாயா, அர்ச்சனாவின் பெற்றோர்கள் காலில் விழுந்து நான் தவறு செய்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்டிருக்கிறார். பின் பூர்ணிமா, விஷ்ணுவும் நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்று பேசுகிறார்.

Advertisement