ஒருவரின் தந்தையை பற்றி பேசுவது தவறு – முதல் முறையாக அர்ச்சனாவிற்கு குவியும் ஆதரவு. என்ன நடந்தது.

0
39771
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 64 நாட்களை கடந்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெறியேறி இருந்த நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறி இருந்தார். இன்னும் 12 மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் கடந்த வாரமே நடைபெற்று முடித்துவிட்டு கடந்த வாரம் கால்சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது அந்த டாஸ்கில் தோல்வி பெற்ற போட்டியாளர்கள் அடிப்படையில் பாலாஜி அனிதா, ஆரி, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் டாப் 3 இடத்தை பிடித்த ஆரி பாலாஜி அர்ச்சனா ஆகிய மூவருமே இந்த வார நாமினேஷனில் இடம் பெற்று இருந்தார்கள். இந்த மூவருக்கும் பதிலாக பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார் ஆரி ஜித்தன் ரமேஷையும், அர்ச்சனா சோம் சேகரையும் நாமினேட் செய்தார்.இதன் அடிப்படையில் இந்த வாரம் ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி நிலையில் இந்த வாரம் ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் ரோபோக்கள் மற்றும் மனிதர்கள் என இரண்டு அணிகளாக பிரிய வேண்டும்.ரோபோக்கள் தலைவராக அர்ச்சனா இருக்க, மனிதர்களின் தலைவராக பாலாஜி இருப்பார் என்றும் மனிதர்கள் டீம், இயந்திரங்களாக மாறியவர்களிடம் இருந்து மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எதாவது இரண்டு உணர்வுகளை கொண்டு வர எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் ஒரே நேரத்தில் 6 பேரும் வந்து பேசினால் என்ன செய்வது என ரியோவிடம் வாக்குவாதத்தில்ஈடுபட்டு இருந்தார் .அப்போது ரியோ விளக்கம் கூற முயன்ற நேரத்தில், நீ என்னை நம்பமாட்டாய் நன்றி எனக்கூறி அறைக்குள் செல்கிறார். அவரை சமாதானப்படுத்த சென்ற பாலாஜி, இது ஒரு கேம் டென்ஷன் ஆக வேண்டாம் என கூறுகிறார், அப்போது அர்ச்சனா “என் தந்தை மரணம் விளையாட்டு அல்ல” என்று மிகவும் ஆக்ரோஷமாக கத்தி பேசி இருந்தார் அர்ச்சனா.

-விளம்பரம்-

அர்ச்சனா பேசிக்கொண்டு இருக்கும் போது இடையில் பேசிய நிஷா, நான் தான் கூறினேன் என்கிறார். அதற்கு அர்ச்சனா யார் கூறினால் என்ன நிஷா? என கோபமாக கேட்கிறார். எல்லா விதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்திருந்தால் அர்ச்சனாவின் தந்தை குறித்து யாரோ பேசியிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், யார் என்ற விவரம் இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும். ஆனால், அதற்குள்ளாகவே, யாரையும் தனிப்பட்ட முறையில் தாககக் கூடாது என்று நெட்டிசன்கள் ட்வீட் போட ஆரம்பித்துவிட்டனர்.

Advertisement