PRகள் செய்யும் பிரச்சனை, டைட்டில் அடித்தும் அர்ச்சனா இதுநாள் தான் ஒரு பதிவை கூட போடவில்லை – ரவீந்தர் கிளப்பிய சர்ச்சை.

0
519
- Advertisement -

பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனாவை விமர்சித்து ரவீந்தர் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்றோடு வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது,. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார்கள். அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது. ஞாயிறு மாலை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் 7

இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை தினேஷ், நான்காம் இடத்தை விஷ்ணு, ஐந்தாம் இடத்தை மாயா பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

மேலும், இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது பிக் பாஸ் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் youtuberகளுக்கு எல்லாம் ஒரே குஷி தான். அவர்களை வைத்து பேட்டி எடுக்க வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த உடனே சில வாரங்கள் போட்டியாளர்களுடைய பேட்டி வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரு.ம். இதனால் ரசிகர்களுமே அதை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில் போட்டியாளர்கள் பலருமே சோசியல் மீடியாவில் பதிவு போட்டு ரசிகர்களுடன் உரையாடியும் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ரவீந்தர் வீடியோ:

ஆனால், அர்ச்சனா மட்டும் எந்த ஒரு போஸ்ட் போடவில்லை என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக ரவிந்தர் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் சலப் சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர், வெளியில் ஏஜென்சி காரர் 13 லட்ச ரூபாயில் கணக்கு வைத்து அலைந்து கொண்டிருக்கிறான். வின் பண்ணது அர்ச்சனா கிடையாது. ஏஜென்சிக்காரன் தான். முதல்ல அதை போய் கிளியர் பண்ணு என்று பேசியிருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

ஏற்கனவே அர்ச்சனாவின் வெற்றி நியாயம் இல்லை. வாக்குகள் வாங்கப்பட்டது என்றெல்லாம் வனிதா கூறியிருந்தார். அதற்கேற்ப அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வதற்கு முன்பே தன்னுடைய பிஆர்டிமை வைத்து தன்னை பிரபலப்படுத்தவும், மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் வகையிலும் ஏற்பாடு செய்துவிட்டு தான் சென்றிருக்கிறார். அதனால்தான் நிகழ்ச்சி முடித்துவிட்டு வந்த உடனே அவரிடம் காசு வசூல் செய்ய ஏஜென்சி டீம் சுத்தி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement