கமல் அப்படி பேசுனது தப்பு, மக்களை உதாசீனப்படுத்திக்கிறார் – பிரதீப் Red Card குறித்து அசீம்.

0
342
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லை மீறும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் சீசன் ஒன்றில் பரணி துவங்கி இந்த சீசனில் பாவா செல்லதுரை வரை நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக ரெக்கார்ட் வாங்கி வெளியேறிய முதல் போட்டியாளர் மஹத்தான். அவரைத் தொடர்ந்து தற்போது ரெக்கார்ட் வாங்கி வெளியேறி இருக்கிறார் பிரதீப்.

-விளம்பரம்-

இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. எனவே அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ் பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.

- Advertisement -

எனவே இந்த வாரம் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள். ஆனால், இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை.

இருப்பினும் பிரதீபால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே மாயா மற்றும் அவரது குழுவினரின் வாதமாக இருந்தது. இதனால் கமல் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்து பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்டு கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார். இதில் அன்ன பாரதி, விசித்ரா, அர்ச்சனாவை தவிர மற்ற அனைத்து பெண்களும் பிரதிப்பை வெளியில் அனுப்பலாம் என்று ஒரு மனதாக தேர்வு செய்தார்கள் இதனால் நிகழ்ச்சியிலிருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

பிரதீப்பின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் பிரதிப்பிற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சீஸனின் வெற்றியாளரான அசீம் இதுகுறித்து பேசியுள்ளதாவது ‘என்னைப் போல எங்கே பலர் ஆடியோ வருவதாக சொன்னார்கள் ஆனால் நான் எந்த தவறான வார்த்தையும் பயன்படுத்தவில்லை வாடி போடி என்று சொன்னேன் ஆனால் அதற்கும் நான் மன்னிப்பு கேட்டு விட்டேன்.

ஆனால், இந்த சீசனில் பலர் தர கெட்ட வார்த்தை பேசி வருகிறர்கள். அந்த வகையில் பிரதீப் பேசிய தரக்குறைவான வார்த்தைகளுக்கு இனி நீங்கள் மீண்டும் அதை செய்யக்கூடாது என்று அவருக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்து இருக்கலாம். ஆனால், ரெட் கார்ட் கொடுத்ததும் பெண்கள் பாதுகாப்பிற்காக கொடுத்ததும் தவறு.

அவருக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்து இருக்கலாம். அதே போல கமல், சார் போன சீசனில் ஒருவர் செய்தவர் போல இந்த சீசனிலும் செய்துவிடலாம் என்று நினைக்காதீர்கள் என்றுசொன்னது எனக்கு கமலோ, விஜய் டிவியோ எனக்கு பட்டத்தை கொடுக்கவில்லை. மக்கள் போட்ட ஓட்டை அவர் சொன்னால் அவர் மக்களை உதாசீனப்படுத்துகிறார் என்று தான் அர்த்தம்.

Advertisement