என்னது Freeze Taskல் அசீமை பார்க்க உதயநிதி வராரா ? அசீம் பேச்சை கேட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
647
azeem
- Advertisement -

பிக் பாஸ் வீட்டின் Freeze டாஸ்க்கில் தன்னை சந்திக்க உதயநிதி வர வேண்டும் என்று அசீம் ஆசைப்பட்டு இருப்பதை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 65 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது 9 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர்.

- Advertisement -

ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம். தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் சென்று கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர் ஒவ்வொருவாக வந்து கொன்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த Freeze டாஸ்க்கில் தன்னை சந்திக்க

பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி விக்ரமனை அவர் ஒரு அரசியல்வாதி என்று சுட்டிக்காட்டி தொடர்ந்து அவரை இழிவு படுத்தி வரும் அசீம் தானும் ஒரு அரசியல் பின்பலம் கொண்ட நபர் தான் என்று பிக் பாஸ் வீட்டில் பேசியதை மறந்து விட்டார் போல. இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு அடிக்கடி சண்டை முட்டிக்கொண்டு வந்தது. அந்த வகையில் விக்ரம் மற்றும் அசிமிற்கு முதல் வாக்குவாதம் ஏற்பட்டபோது அசீம் விக்கிரமனை பார்த்து வெள்ளை சட்டை போட்டால் நீ என்ன அரசியல்வாதியாடா என்று மிகவும் ஏராளமாக பேசினார்.

-விளம்பரம்-

இதைத்தொடர்ந்து சக போட்டியாளர்களிடம் விக்ரமன் ஏன் தன்னிடத்தில் பேச பயப்படுவார் என்று தன்னுடைய அரசியல் பலம் குறித்து பேசிய அசிம்’விக்ரமன் ஒரு சீரியல் நடிகர் தான். முதலில் அவர் சீரியல்களில் தான் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் அவர் அரசியலுக்கு வந்தார். ஆனால், அவர் சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்பதை வெளியில் காண்பித்து கொள்ளவில்லை. நான் சீரியலில் எண்ட்ரியாகவும் போது அவரும் சீரியலில் தான் நடித்து கொண்டு இருந்தார்.மேலும், என்னுடைய அம்மா உடன் கூட பிறந்த தம்பி. அதாவது, என் சித்தப்பா உடைய கட்சியில் அவன் உறுப்பினராக இருக்கிறான்.

அதனால் தான் அவன் என்னிடம் சரியாக பேசுவதில்லை என்று கூறி இருந்தார். அதே போல தீபாவளி பண்டிகை முன்பு பேசிய அசீம் ”உதய் அண்ணா மற்றும் கிருத்திகா அண்ணி உங்களை நான் மிஸ் பண்ணுவேன் வருடம் வருடம் உங்களை வந்து நான் பார்ப்பேன். ஆனால், இந்த முறை உங்களை பார்க்க முடியவில்லை. ஹேப்பி தீபாவளி அண்ணா மற்றும் அண்ணி’ என்று பேசி இருந்தார். இப்படி அடிக்கடி தனக்கு அரசியல் பின்புலம் இருக்கிறது என்று சுய தம்பட்டம் அடித்து கொண்ட அசீம், தற்போது தன்னை பார்க்க உதயநிதி வர வேண்டும் என்று எதிர்பாத்து இருப்பதை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement