விக்ரமன் மீது பெண் அளித்த புகார், திடீரென்று ஆஜராகி அசீம் போட்ட பதிவு – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
380
Vikraman
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருந்தனர். இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அடிக்கடி சண்டை வந்தது. அப்படி சண்டை வரும் போதெல்லாம் வார இறுதியில் பஞ்சாயத்து செய்யும் கமல், பெரும்பாலும் விக்ரமன் பக்கம் நின்று தான் நியாயம் பேசினார்.

- Advertisement -

விக்ரமன் ஒரு அரசியல் கட்சியை சேர்த்தவர் என்பதால் தான் விக்ரமனுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என்று அடிக்கடி அசீம் ரசிகர்கள் விமர்சனம் செய்து வன்தனர். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னும் அசீம் – விக்ரமன் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் விக்ரமன் சிக்கி இருக்கும் சர்ச்சை குறித்து அசீம் பதிவிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் அந்தப் புகாரில் விக்ரமன் தன்னை காதலித்ததாகவும் தன்னை காதலித்த போதே பலமுறை தன்னை வேசி என்று தன்னை திட்டியதாகவும் என்னுடைய பணத்தை ஏன் செலவு செய்து குறித்து கேட்டதற்கு”நீயே போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து கவர்மன்ட்டை ஏமாற்றி ஸ்காலர்ஷிப் வாங்கி ஓசி சோறு சாப்புட்ற” என்று கீழ்த்தரமாக பேசினார் என்றும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை ககூறி இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இந்த விவகாரத்தில் இதுநாள் வரை விடுதலை சிறுத்தை கட்சி விக்ரமன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போல விக்ரமனும் இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டு இருக்கும் அசீம் ‘நண்பர் விக்ரமன் இதிலிருந்து மீண்டு வருவார். மீண்டும் எழுந்து வருவார். வா சகோ, நண்பா மீண்டு வா, மீண்டெழுந்து வா’ என்று பதிவிட்டுள்ளார்.

அஸீமின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் அஸீமின் பெருந்தன்மையை பாராட்டி வருகின்றனர். ஆனால், விக்ரமனே இந்த புகார் குறித்து எதையும் கண்டுகொள்ளவில்லை நீங்கள் ஏன் இதை பற்றி பேசி விளம்பரம் செய்கிறீர்கள் என்று ஒரு சில விக்ரமன் ரசிகர்கள் அசீமை விமரித்தும் வருகின்றனர். உண்மையில் அசீம், நல்ல எண்ணத்தில் தான் இதை போட்டாரா இல்லை விக்ரமனை குத்திக்காண்பிக்க இப்படி போட்டாரா என்பது அவருக்கு வெளிச்சம்.

Advertisement