விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.
தடாலடி தற்பெருமை திலகம் ? 🤔 pic.twitter.com/SOwoR7rGcp
— Subash_kpm (@subash_kpm) January 29, 2023
இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
அதே போல பொதுவாக வெற்றியாளரை தான் முதலில் பேச வைப்பார்கள். ஆனால், அஸீமிடன் கோப்பையை கொடுத்துவிட்டு கமல், விக்ரமனை தான் முதலில் பேச வைத்தார். இதையெல்லாம் காரணமாக சொல்லி நெட்டிசன்கள் பலரும் கமலுக்கே அசீம் வென்றது பிடிக்கவில்லை என்பது போல கூறி வருகின்றனர்.இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அடிக்கடி சண்டை வந்தது.
Dei thalapathy line use pannathae🚶♀️🤦♀️kadae irruku
— Barathi78 (@Barathi78) January 29, 2023
அப்படி சண்டை வரும் போதெல்லாம் வார இறுதியில் பஞ்சாயத்து செய்யும் கமல், பெரும்பாலும் விக்ரமன் பக்கம் நின்று தான் நியாயம் பேசினார். விக்ரமன் ஒரு அரசியல் கட்சியை சேர்த்தவர் என்பதால் தான் விக்ரமனுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என்று அடிக்கடி அசீம் ரசிகர்கள் விமர்சனம் செய்து வன்தனர். பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெருத்த அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
அதே போல பிக் பாஸ் கோப்பையை கமல், விக்ரமனை வைத்து தான் அஸீமிற்கு கொடுக்க வைத்தார். கோப்பையை வாங்கியதும் அசீம் கொண்டாட்டத்தில் ஆராவாரம் செய்ய அஸீமிடம் இருந்து ஒதுங்கி நின்ற கமல், விக்ரமன் அருகில் சென்று அவரை ஆஸ்வாசப்படுத்தினார். அதே போல என்னதான் அசீம் பட்டத்தை வென்றாலும் கடந்த இரண்டு தினங்களாக விக்ரமன் தோற்றத்தை பற்றி தான் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர்.
என்னடா இது இவனை வாழ்த்தி யாரும் Tweet போடவில்லை என்று இவனே இவனுக்கு புகழ் பாடி ஒரு கேவலமான tweet போடுறான் வெளியே வந்தும் திருந்தல போல பாவம் ஒரு நல்ல டாக்டரை பாக்கணும்
— Amutha Dhana (@DhanaAmutha) January 29, 2023
இப்படி ஒரு நிலையில் விஜய் பாடல் வரிகளை போட்டு தன்னை தானே புகழ்ந்து அசீம் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலி தானே வெளயாட நெனச்சா உன் விதி முடிப்பானே சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமானே ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற எடமே என்று வாரிசு படத்தில் வரும் தீ தளபதி பாடல் வரிகளை போட்டு தனக்கு தானே Fire விட்டு கொண்டு இருக்கிறார்.
1 week into successfully trending the #AbuserAzeem tag.🔥😎#AramVellumLegalAid
— BASKAR (@baskar_shri) January 29, 2023
அதுமட்டுமல்லாமல் போன்ற ஹேஷ் டேக்குகளை போட்டு இருக்கிறார். அஸீமின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நெட்டிசன் ஒருவர் ‘என்னடா இது இவனை வாழ்த்தி யாரும் Tweet போடவில்லை என்று இவனே இவனுக்கு புகழ் பாடி ஒரு கேவலமான tweet போடுறான் வெளியே வந்தும் திருந்தல போல பாவம் ஒரு நல்ல டாக்டரை பாக்கணும்’ என்று கேலி செய்து இருக்கிறார்.