இந்த ஆளுகூடலாம் எப்படி குடும்பம் நடத்துறது, , திரும்பி கிரும்பி வந்திடாதம்மா தாயே – தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாக பேசிய விசித்ரா.

0
166
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதுவரை மூன்று டாஸ்க்குகள் முடிவடைந்துள்ளது.

- Advertisement -

இதில் முதல் இடத்தில் விஷ்ணுவும் அவரை தொடர்ந்து நிக்சன், பூர்ணிமாவும் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களாகவே விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் சென்று கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் விசித்ரா, தினேஷ் மற்றும் அர்ச்சனாவின் பக்கம் தான் இருந்தார். ஆனால், கடந்த சில வாரங்களாக மாயா மற்றும் பூர்ணிமா கேங்கில் சேர்ந்துவிட்டார். இதனால் அடிக்கடி தினேஷ் பற்றி தொடர்ந்து குறை சொல்லி வருகிறார் விசித்ரா.

அந்த வகையில் சமீபத்தில் தினேஷ் குறித்து பேசிய விசித்ரா ‘சில மூஞ்சிகளை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த வெறுப்பு போகவே மாட்டேங்குது. இது எல்லாம் இருந்தென்ன பிரயோஜனம் வாழ்ந்து என்ன பிரயோஜனம். இப்படிப்பட்ட ஆளுடன் எப்படி குடும்பம் நடத்துவார்கள், விட்டுட்டு ஓட வேண்டியது தான். ஒரு மூன்று மாதம் இவர்களுடன் குடித்தனம் பண்ண முடியவில்லை. இவருடன் எல்லாம் எப்படி ஒருவர் குடித்தனம் நடத்துவார், திரும்பி கிரும்பி வந்திடாதம்மா தாயே, ஒழுங்கா வாழ்க்கையை நடத்து. இவனுடயெல்லாம் வாழ்வதற்கு நீ தனியாகவே இருந்து விடலாம்

-விளம்பரம்-

ஏற்கனவே முதல் TTF டாஸ்கின் போது தினேஷ் மற்றும் விசித்ரா ஆகிய இருவருக்கும் சில வாக்குவாதம் சென்றது. அப்போது தினேஷ் பற்றி பேசிய விசித்ரா ‘தினேஷ் என்னைப் பத்தி ரொம்ப மோசமா பேசிட்டே இருக்கார்’ என்று அவர் சொன்னது வரையில் ஓகே. ஆனால் அதையும் தாண்டி “அவருக்கு வாழ்க்கையில் பியூர் லவ் கிடைச்சே இருக்காது. கிடைச்சத திருப்பித் தரவும் தெரியாத ஆளு. அன்பிற்கு தகுதியான ஆளும் அவர் இல்ல. நான் பண்றதெல்லாம் நடிப்புன்றாரு.

எல்லாமே நடிப்பா” என்று தினேஷின் தனிப்பட்ட விவகாரத்தையொட்டி விசித்ரா பேசி இருந்தார். அதற்கு நிக்சன் கூட அப்படி எல்லாம் சொல்லாதீங்க, வெளியில் அவர் எப்படி இருப்பார் என்று நமக்கு தெரியாது என்று சொன்னார். ஆனால், விசித்ரா அப்போதும் தினேஷ் மீது வன்மத்தை கக்கினார். இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் பலரும் விசித்ராவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

ஏற்கனவே மாயா பூர்ணிமா கூட ரஷிதாவின் விஷயத்தை இழுத்து ஏதாவது தினேஷை செய்யலாம் என்று திட்டம் தீட்டியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே போல ஆரம்பத்தில் விசித்ரா, மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு எதிராக தான் இருந்தார். அப்போது தினேஷ் – அர்ச்சனாவிற்கு தான் அடிக்கடி ஆதரவாக பேசி வந்தார். ஆனால், கடந்த சில வாரமாக தான் மாயா கேங்கில் சேர்ந்து இப்படி மோசமாக பேசி வருகிறார்.

Advertisement