BiggBoss Tamil : Smooking ரூமில் நடந்தது இதான் – அபிராமி இடுப்பை கிள்ளிய சர்ச்சை குறித்து பாலாஜி விளக்கம்.

0
488
niroop
- Advertisement -

அபிராமி இடுப்பை கிள்ளியாதாக நிரூப் கூறிய நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் பாலா. ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட்டில் தினமும் ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்துகொன்டு தான் தான் வருகிறது. அதே போல பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் காதல் கதை நிச்சயம் இருக்கும். ஆனால், இந்த சீசனில் சற்று வித்யாசமாக காதலில் பிரிந்த இரண்டு பேர் கலந்துகொண்டு இருக்கின்றனர். அது தான் அபிராமி – நிரூப். இந்த சீசனில் தான் இவர்கள் இருவரும் காதலித்து பிரிந்த கதையை சொன்னார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-56.jpg

இதில் நிரூப் ஏற்கனவே யாஷிகாவை காதலித்ததும் அது பிரேக் அப் ஆனது குறித்தும் கடந்த சீசனில் சொல்லி இருந்தார். அதே போல அபிராமியும் முகேனை ஒரு தலையாக காதலித்து தெரியும். மேலும், நிரூப் கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரும் யாஷிகாவும் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது போலவே நிரூப் – அபிராமி புகைப்படங்களும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் தான் இவர்கள் இருவரும் காதலித்து பின்னர் பிரிந்துவிட்டதாக கூறி இருந்தனர்.

- Advertisement -

ஒரே வீட்டில் இருக்கும் முன்னாள் ஜோடிகள் :

பிரிந்த காதலர்கள் பிக் பாஸ் வீட்டில் ஒன்றாக இருப்பதால் இருவரும் மீண்டும் காதலில் விழுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அபிராமிக்கும் – பாலாஜிகும் ஒரு கெமிஸ்ட்ரி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே பாலாஜி – அபிராமிகும் இடையே எதோ சென்று கொண்டு இருக்கிறது என்று போட்டியாளர்கள் முனு முனுக்க துவங்கி இருக்கும் நிலையில் பாலாஜியும் அபிராமி பின்னால் தான் சுற்றோக்கொண்டு வருகிறார்.

பாலாஜி குறித்து பேசிய நிரூப்

என்னதான் இனி நாங்கள் சேரப்போவது இல்லை என்று நிரூப் கூறிக்கொண்டு வந்தாலும் பாலாஜி, அபிராமி மீது காட்டும் பரிவை நிரூப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் பாலாஜி, அபிராமியின் இடுப்பை கிள்ளியதாக வனிதாவிடம் சொல்லி புலம்பி இருந்தார் நிரூப். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய நிரூப், என் முன்னாடியே அபிராமி இடுப்பை கிள்றான். அவளும் எதுவும் சொல்லவில்லை.

-விளம்பரம்-

பாலாஜி அளித்த விளக்கம் :

அவனுக்கு எங்க ரெண்டு பேருக்கு என்ன நடந்ததுன்னு அவனுக்கு நல்லா தெரியும், நீ வெளிய போய் என்ன கருமத்த வேனா பண்ணு ஆனா, என் முன்னாடி பண்ணாத என்று நிரூப் புலம்பி இருந்தார. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் ஸ்மோக்கிங் ரூமில் என்ன நடந்தது என்று தாமரையிடம் கூறி இருக்கிறார் பாலாஜி. அதில், ஒரு பொண்ணு இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்டு இருக்கிறார் அதனால் தான் நான் அவனிடம் இது பற்றி பேசவில்லை.

ஆதாரம் கேட்ட பாலாஜி :

அந்த ஸ்மோக்கிங் ரூமில் நின்று கொண்டு இருந்தேன். அப்போது தெரியாமல் என் கை மீது சாய்ந்துவிட்டாள். ஆனால், நான் அவள் இடுப்பை கிள்ளிவிட்டதாக சொல்லி இருக்கான். இத கேக்க சொல்ல எனக்கு எவ்ளோ காண்டா இருக்கும். மேலும், நான் அப்படி பண்ணேன்னு என்ன ஆதாரம் இருக்கு.மேலும், நான் பிக் பாஸ் கிட்டயே சொல்லிட்டேன் அப்படி எதாவது இருந்துச்சின்னா மக்கள்க்கு போட்டு காமிச்சிடுங்க என்று சொல்லிட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement