பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருந்த நிலையில் பாலாஜி வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுவதற்கு முன்பாக பாலாஜி மேடையில் பேசியது அணைத்து ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. அதே போல இதுநாள் வரை பாலாஜி வெளியில் வந்ததும் நித்யாவுடன் சேர்ந்து விட மாட்டாரா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கான விடையும் தற்போது கிடைத்ததுள்ளது.
Look at this#Balaji–#Nithya‘s daughter herself is so OBSESSED with #AishwaryaDutta and trying to copy her signature statements in d house
This is d impact she has on children
Stop hating her blindly#BiggBossTamil2#AishwaryaDuttaArmy@vijaytelevision
Please VOTE guys pic.twitter.com/HDFOfKZHwg— #BiggBossTamil2 (@bbtamil2) September 26, 2018
சமீபத்தில் பாலாஜி, நித்யா மற்றும் அவரது குழந்தை போஷிகாவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. இதன் மூலம் நித்யா, பாலஜியுடன் சேர்ந்து வாழ தூங்கிவிட்டாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த பாலாஜிக்கும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பாலாஜிக்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தது அதனை கமலே கூட குறிப்பிட்டு சொன்னார். பிக் நிகழ்ச்சியில் இருந்து விடைபெருவதற்கு முன்பாக மேடையில் தனது மனைவியையும், மகளையும் கண்டு மிகவும் கண்கலங்கி நின்றார்.
பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அதிகம் உச்சரித்த பெயர் என்றால் அது அவருடைய மகள் போஷிக்கா தான். பிக் பாஸ் வீட்டில் நித்யா இருந்த போது அவர் மீது கடுமையாக நடந்து கொண்டாலும் நாட்கள் செல்ல செல்ல நித்யாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டார் பாலாஜி. அத்ற்கு முக்கிய காரணமே அவரது மகள் போஷிகா தான். தனது மகள் போஷிகாவிற்காக இனிமேல் கோவப்படாமலும், குடிக்காமல், சந்தேகபடாமலும் இருப்பேன் என்று தனது மனைவிக்கு உறுதியளித்திருந்தார் பாலாஜி.
அதே போல நித்யாவும், பாலாஜி எப்படி 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டின் உள்ளளே இருந்தாரோ வெளியேயும் அதே போல குடிக்காமல், என்னை சந்தேகபடாமல் இருந்தால் அவருடன் நான் வாழ தாயார் என்று தெரிவித்திருந்தார் நித்யா. அவருக்கு பிக் பாஸ் போலவே வெளியேயும் 100 நாட்கள் ஒரு பிக் பாஸ் இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது தனது மனைவி கூறியது போலவே ஒரு புதிய மனிதராக வாழ தொடங்கிவிட்டார் பாலாஜி என்ற எண்ணம் தோன்றுகிறது. விரைவில் இவர்கள் வாழ்வில் சுமுகமாக ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று வாழ்த்துவோம்.