குடித்துவிட்டு யாஷிகா கார் விபத்தை ஏற்படுத்தினார் என்று செய்து வெளியானது நினைவிருக்கிறதா – அதற்கு காரணமே பாலாஜி தானாம்.

0
6215
balaji
- Advertisement -

கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிங்டன் சாலையில், கார் ஒன்று வேகமாக சென்றுகொண்டிருந்தது. அங்கு, சாலையோரத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் பரத் என்பவர் நின்றுகொண்டிருந்தார். அவர் மீது வந்த வேகத்தில் கார் மோதியுள்ளது. இதில், அவர் படுகாயமடைந்தார்.காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும், அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்ததாகவும்விபத்து நடந்ததையடுத்து அவர் காரிலிருந்து இறங்கி, வேறு வாகனத்தில் ஏறி சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது.

-விளம்பரம்-

ஆனால், இந்த செய்தியை மறுத்த யாஷிகா, அது தன்னுடைய கார் இல்லை என்றும் என்னுடைய நண்பர்கள் செய்த விபத்து செய்தியை கேட்டு தான் அங்கே சென்றதாவும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவம் குறித்து சில அதிர்ச்சியான தகவலை ஜோ மைக்கேல் கூறியுள்ளார். பாலாஜி சொன்னார் தன்னுடைய பெற்றோர்கள் தன்னை சரியாக வரவில்லை என்று நாம் அவரை சரியாகத்தான் வளர்க்கவில்லை அப்படி ஒழுங்காக வளர்த்திருந்தால், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில், சங்கீதா ஹோட்டல் எதிரில் ஒரு ஸ்விக்கி டெலிவரி பாய்யை ஒரு கார் இடித்து இருக்காது , அந்த காரில் இருந்து குடித்துவிட்டு பாலாஜி ஓடிச்சென்று இருக்க மாட்டார்.

- Advertisement -

இந்த வழக்கு நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் துறையில் இன்னமும் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், பேசிய ஜோ மைக்கேல். யாஷிகா மற்றும் பாலாஜி இருவரும் நண்பர்கள் தான் இந்த கார் விபத்து நடந்தபோது நான் வெளியூரில் இருந்தேன். யாஷிகா குடித்துவிட்டு கார் விபத்தை ஏற்படுத்தி விட்டார் என்று செய்தியை நான் தொலைக்காட்சியில் பார்த்த உடன் யாஷிகாவை தொடர்பு கொள்ள முயன்றேன். அப்போது யாசிக்காவின் நண்பரை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தேன்.

அப்போது அவர் என்னிடம் சொன்னது யாஷிகா அந்த காரில் இல்லை முடித்துவிட்டு நாங்கள் தனியாக போய்விட்டோம் எங்கள் கூட வந்த பாலாஜியும் அவரது நண்பரும் வேறு ஒரு காரில் போய் மோதி விட்டார்கள். அப்போது பாலாஜி எங்களுக்கு கால் செய்து நாங்கள் விபத்தை செய்துவிட்டோம் எங்களுக்கு உதவி வேண்டும் என்று அழைக்கும் போது தான் நாங்கள் அங்கே வந்தோம். ஆனால் அங்கே இருந்த மீடியாகாரர்கள் எங்களை பார்த்ததும் நாங்கள் தான் விபத்தை ஏற்படுத்தியதாக நினைத்து விட்டார்கள் என்று என்னிடம் கூறியதாக ஜோ மைக்கேல் கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement