ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த பாலாஜி முருகதாஸ். காரணம் இது தான்.

0
7046
archana
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் தற்போது அர்ச்சனாவிற்கும் பாலாஜிக்கும் இடையிலான பிரச்சனை தான் மிகவும் கொழுந்துவிட்டு எரிகிறது. அர்ச்சனா உள்ளே நுழைந்த நாள் முதலே அனைத்து விஷயங்களுக்கும் மூக்கை நுழைத்து பஞ்சாயத்து செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் போட்டியாளரை இல்லை ஆங்கரா என்பது போல ஒரு சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அவ்வளவு ஏன் கமல் கூட அர்ச்சனாவிடம் அவர் செய்யும் நாட்டாமை வேலையை மறைமுகமாக கேலி செய்து இருந்தார். இருப்பினும் அர்ச்சனாவிற்கு ரியோ போன்றவர்களின் ஆதரவு இருந்து வருவதால் அவர் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-
https://twitter.com/Daisy_Titu/status/1321302588856426497

இருப்பினும் அர்ச்சனாவின் நாட்டாமை வேலைகளுக்கு பாலாஜி அடிக்கடி பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அர்ச்சனா, பாலாஜியை குழந்தை என்று குறிப்பிட்டபோது கடுப்பான பாலாஜி நீங்கள் என்னை குழந்தை என்று கூப்பிட வேண்டாம் என்று கூறியிருந்தார். அதேபோல இனிமேல் தன்னை யாரும் வாடா போடா என்று அழைக்க வேண்டாம் என்றும் அனைவர் முன்பும் பேசி இருந்தார் பாலாஜி. பாலாஜியின் இந்த பேச்சுக்கள் ரியோ மற்றும் அர்ச்சனா ஆகியோர் மத்தியில் கொஞ்சம் கடுப்பை கிளப்பியது. அதிலும் குறிப்பாக அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் அடிக்கடி சண்டை மூட்டி கொண்டே.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் கிளீனிங் டீமில் இருந்த பாலாஜி தூங்கிக் கொண்டிருந்த போது அவரை வீட்டை பெருக்க மீனிங் டீமில் இருந்த வேல்முருகன் அஜித் ஆகியோர் எழுப்பினார்கள் அப்போது பாலாஜி தூக்கத்தில் எழுப்பி வேலை செய்ய செல்வது சரியான விஷயம் இல்லை என்று கூறியிருந்தார். அர்ச்சனா, பாலாஜியை அழைத்து வரவில்லையா என்று கேட்க பின்னர் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பாலாஜி வேலை செய்தார். இதனால் அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பாலாஜி கேப்டனாக இருந்தால் என்ன கொம்பு முளைத்து விடும் ஒருவர் உடல்நிலை முடியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களை எழுப்பி வேலை வாங்குவீர்களா அடுத்த வாரம் நான் கேப்டனாக வந்தால் அனைவரையும் அம்மி அரைக்க விடுகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான மற்ற போட்டியாளர்கள் பாலாவிடம் வாக்குவாதம் செய்தார்கள். அதிலும் குறிப்பாக ரியோ மற்றும் அர்ச்சனா பாலாஜியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

-விளம்பரம்-
https://twitter.com/Firstperson_01/status/1321137437427392515

அர்ச்சனா, பாலாஜியிடம் ‘நான் தான் இந்த வீட்டின் கேப்டன். இன்னும் 4 நாட்கள் உங்களுக்கு புடிக்கிதோ இல்லையோ நீங்க செஞ்சி தான் ஆகணும்’ என்று கடமையாக பேசி இருந்தார். அர்ச்சனா மட்டுமல்லாது உடன் இருந்த ரியோ கூட பாலாஜியை கார்னர் செய்தார். இதையடுத்து பாலாஜி, தனிமையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தார். இது நாள் வரை வீட்டில் கெத்தாக இருந்த பாலாஜியையே அழ வைத்து விட்டார்கள் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.

இப்படி ஒரு நிலையில் பாலாஜி முருகதாஸ் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்து இருக்கிறது. பாலாஜி முருகதாஸ் என்று ஹேஷ் டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் பலர் பாலாஜிக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல ஒரு சிலரோ பாலாஜியின் செயல் மிகவும் திமிரான செயல் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், பாலாஜி பிக் பாஸ் வீட்டில் தற்போது ரியோ மற்றும் அவரது கேங்கால் ஒதுக்கப்பட்டு வருகிறார் என்றும் ட்விட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement