நண்பர்களே துரோகம் பன்னிட்டாங்க – பிக் பாஸுக்கு பின் பாலாஜியின் முதல் பதிவு.

0
128267
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்றோடு ஜனவரி 17) நிறைவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

அதே போல இறுதி போட்டிக்கு ஒரு சில நாள் மட்டுமே இருந்த நிலையில் கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துகொன்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். இறுதியில் ரியோ மூன்றாம் இடத்தையும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் ஆரி முதல் இடத்தையும் பிடித்தார். ஆரி மற்றும் பாலாஜிக்கு பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : கடற்கரையில் ஜூலி நடத்திய போட்டோ ஷூட் – வாயடைத்து போன ரசிகர்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாஜி முதன் முறையாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்த அற்புதமான பயணத்தில் எனக்கு ஆதரவு அளித்த அணைத்து ரசிகர்களுக்கும் நன்றி.அதே போல என் மீது சந்தேகம் வைத்திருந்து என்னை கடினமாகவும் நன்றாகவும் உழைக்க செய்தவர்களுக்கும் நன்றி. உங்கள் அணைத்து நேரத்திற்கும், அன்பிற்கும் நன்றி என்று கூறியுள்ளார் பாலாஜி.

அதே போல தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மச்சான், தம்பி தங்கச்சி எல்லாருக்கும் நன்றி. நான் பிக் பாஸ் உள்ளே இருக்கும் போது வெளியில் இருந்த என்னுடைய நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்களே எனக்கு துரோகம் செய்தனர், நீங்கள் தான் எனக்கு ஒரு தூணாக இருந்தீர்கள். அதை நினைத்து பெருமையடைகிறேன். எந்த வருத்தமும் இல்லை, மனதார விளையாடி இந்த 105 நாட்களை அனுபவித்தேன் என்று பதிவிட்டுள்ளார் பாலாஜி.

-விளம்பரம்-
Advertisement