பெண்களை டாஸ்க்கின் போது முரட்டுத்தனமாக தாக்கும் பாலாஜி – வைரலாகும் வீடியோ. தட்டிக்கேட்பாரா சிம்பு ?

0
478
balaji
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி எட்டாவது வாரத்தின் இறுதியை நெருங்கி உள்ளது. நிகழ்ச்சி இருந்து கட்டம் நெருங்க நெருங்க போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
biggboss

மேலும், இந்த நிகழ்ச்சியில் இதுவரை இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுஜா வருணி, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பின் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ரம்யா பாண்டியன் வந்து உள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அனிதா, சுருதி, நிரூப், தாமரை, ஜூலி,சதீஷ் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.

- Advertisement -

கடந்த வாரம் எலிமினேட் ஆனவர்:

இதில் ஜூலி இந்த சீசனில் நல்ல பெயரை எடுத்து வருவதால் அவர் இந்த வாரம் போக மாட்டார் என்று கூறப்பட்டது. இதில் சதிஷ் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அனிதா வெளியேறி இருக்கிறார். உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது திடீரென்று அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும்,சுரேஷ் தாத்தா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க, தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா :

எட்டாவது வாரம் முடிய உள்ள நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் பாலாஜி முருகதாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை யாரையும் பார்க்காமல் தனித்து விளையாடி வருகிறார். மேலும், நிகழ்ச்சியில் பாலா, அபிராமி உடன் பழகுவது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. இதற்கு பலரும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருந்தார்கள். ஆனால், இதை இருவரும் மறுத்து நாங்கள் நல்ல நண்பர்கள்தான் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாலாஜிக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலி இருக்கிறார். அவருக்காக தான் பாலாஜி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

-விளம்பரம்-

பாலாஜி- அபிராமி குறித்த காதல் சர்ச்சை:

இப்படியிருந்தும் பாலா, அபிராமி உடன் நெருக்கமாக பழகுவது குறித்து பலரும் பலவிதமாக கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாலா விளையாடிக் கொண்டு வருகிறார். அதே போல் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பாலாஜிக்கும் நிரூப்க்கும் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டிருக்கிறது. பலமுறை இருவருக்குள் ஏற்பட்ட மோதல் பெரிய கலவரமாகவே மாறி இருக்கிறது. அதேபோல் அனிதா- பாலாவிற்கும் கூட பல சர்ச்சைகள் இருந்தது. இருந்தாலும் பாலாஜி ஒவ்வொரு டாஸ்க்கிலும் வெறி கொண்டு விளையாடி இருக்கிறார்.

பெண்களிடம் பாலா நடந்து கொண்ட விதம்:

இந்த நிலையில் பாலா விளையாடும்போது டாஸ்க்கில் பெண்களை பயங்கரமாக தாக்கி விளையாடி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை எழுப்பி உள்ளது. அது என்னவென்றால், இதுவரை நடந்த டாஸ்கில் பாலா பெண்களிடம் நடந்துகொண்ட விதத்தை வீடியோவாக பதிவு செய்து இருக்கிறார்கள். அதில் பாலா, பெண்களிடம் முரட்டுத்தனமாக நடந்து அவர்களை கீழே தள்ளி விளையாடியிருக்கிறார். இதை பார்த்த தொகுப்பாளர் சிம்பு என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று தெரியவில்லை. தயவுசெய்து இதை கண்டியுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி ரசிகர் ஒருவர் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பாலாவை விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். இதனையடுத்து இந்த வாரம் இறுதியில் சிம்பு, பாலாவிடம் இதுகுறித்து கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement